>>அன்றே சொன்னார்கள்
அன்றே சொன்னார்கள் 10
மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள்
கடல் நீர் முகிலாக மாறி மழையாகப் பெய்யும் அறிவியல் உண்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்து உரைக்கின்றன.
வானம்
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து
என்னும் பாடல் வரிகள் (நற்றிணை 289: 3-6; மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்) வானம் நெருக்கமான கடல்நீரை முகந்து செறிவு அடைந்து இருண்டு மிக்க மழையைப் பொழிகிறது என்று மழை பற்றிய அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகின்றன.
கருவூர்க் கலிங்கத்தார் என்னும் புலவர் (அகநானூறு 183: 6-9) பெரிய கடலிலே இறங்கி நீரைப் பருகும் முகில் பற்றி
..... பெருங்கடல் இறந்துநீர் பருகிக்
. . . . . . . . . .. . . . . . .
.. . . . கொண்மூ
எனக் கூறுகிறார். (கொண்மூ - முகில் / மேகம்)
இடைக்காடனார் என்னும் மற்றொரு புலவர் (அகநானூறு 374: 1-6;) மாக் கடல் முகந்து, எனத் தொடங்கும் பாடலில் கடலில் இருந்து நீரை முகந்து இடி இடித்து மின்னி மழை பெய்வது குறித்து விரிவாகக் கூறுகிறார்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment