Showing posts with label எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!. Show all posts

Saturday, October 18, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி)

திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல.

insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பதுநொடிப்பு என்று சொல்லலாம்இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் > நொடித்தவர் என்றே சொல்வோம்.

இதில் மைனர்  எனத் தமிழிலேயே குறிக்கப்பட்டுள்ளதுஅகவைக்கு  வராதவர்களைக் குறிக்கும்  minor இளம்படியர்  எனவும் அகவை வந்தவரைக் குறிப்பிடும்  major  பெரும்படியர் எனவும் கூறப்படுவர்.

இளவர், அகவை வராத,வயது வராத, சிறிய,உரிமை வயது எய்தாதவர், உரிமை வயது அடையாதவர் என்று பொருள்கள். கணக்கில் சிறிய, சிறு பகுதி என்றும் புள்ளியியலில் சிற்றணி என்றும் பொருள்கள்.

வழக்குகளில் மைனர் என்று வந்தால் என்ன சொல்ல வேண்டும்?

வழக்குகளைப் பொருத்த வரை  இவை முறையே சிறு வழக்குபெரு வழக்கு எனப்படும்.

 மைனர் என்றால் adolescent, juvenile  என்று சொல்கிறார்களே?

adolescent என்பது வளரிளம்பருவத்தினரையும்  juvenile என்பது இளஞ்சிறாரையும் குறிக்கும்.

adolescent என்றால் வளர்நிலைச் சிறார்>வளர்சிறார் எனலாம். வளர்சிறார் என்றால் எல்லாருமே வளருபவர்தாமே என்று சொல்லக்கூடாது. சொற்களை வரையறைப்படுத்தி வகைப்டுத்திக் கொள்ள வேண்டும். Adolescent-விடலை என்றும் கூறுகின்றனர். விடலைப்பருவம் என்பது பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ள பருவத்தைக் குறிப்பது. எனவே, adolescent என்பதற்கு விடலை பொருந்தாது.

 இளஞ்சிறார் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

          நான் இளஞ்சிறார் நடுவர் மன்றத்தில்(Juvenile Court) நன்னடத்தை அதிகாரியாகப் பணியேற்ற உடன் இளஞ்சிறார் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அப்பொழுது ஒரு சாரார்  சிறுவர் என்றே சொல்லலாம் என்றார்கள். சிறுவர் என்பது பொதுவான சொல்லாகும்: சிறுவர்  என்பதன் பன்மை வடிவம் சிறார். அவரிலும் சிறு பருவத்தினரைக் குறிக்கும் வகையில் இளஞ்சிறார் என்பது சரிதான் என்று கூறிப் பயன்படுத்தி வந்தேன். அதனையே நீதிமன்றத்திலும் பின்னர் காவல் நிலையங்களிலும் பிற அலுவலகங்களிலும் ஏற்று இன்று தொலைக்காட்சி முதலான தகவல் ஊடகங்களிலும் இளஞ்சிறார் என்றே குறிப்பிடுகின்றனர். எனவே பயன்படுத்தப் பயன்படுத்த எச் சொல்லும் எளிமையானதுதான்.

          ? juvenile என்று சொல்லின் பொருளை இச்சொல் குறிக்காது. அப்படியே பயன்படுத்தினால் என்ன?

          ? நாமாகவே இவ்வாறு கற்பனையில் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கருதுகிறோம். உண்மையில் தமிழில் ஆடவருக்குக் குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என 6 பருவங்களும் பெண்டிருக்குப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7   பருவங்களும் குறிக்கப் படுகின்றன. இத்தகைய பருவ வரையறையும் சொல்லாட்சியும் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமையால், தமிழில்  உள்ள பருவங்களை நாம் மறந்து  இவ்வாறு பிறமொழிக்கேற்ப சொல்லாட்சியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுகிறோம்.

          post-mortem  – பிரேத விசாரணை என வந்துள்ளது.பிரேதம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பிணம் என்றே சொல்லலாம். சடலம் என்பது உடலைக் குறிக்கும். உடற்கூறு ஆய்வு என்பதால் உயிரற்ற உடல் என்ற பொருளில் சடலம் என்றே குறிக்கலாம்.

post-mortem report – இறப்பு விசாரணை என்று சொல்லலாமா?

அப்படிச் சொன்னால், எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புற உசாவலாக அமையும்.

 inquest எனப்படுவது   எவ்வாறு மரணம் நேர்ந்தது என்பது பற்றிய , உசாவுதலைக் குறிக்கும். அதுதான் இறப்பு விசாரணை, இறப்பு உசா. இங்கு இறந்த உடலை ஆய்வு செய்வதால் உடல ஆய்வு, பிண ஆய்வு  என்று சொல்ல வேண்டும்.

இப்பதிவேடு தமிழில் இருந்தாலும் minute book என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பொழுது ஆட்சிச் சொல்லகராதியைப் பார்த்தாவது அடுத்தவரிடம் கேட்டாவது தமிழில் எழுத வேண்டும் என்ற முயற்சி உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குறிப்பான  minute நிகழ்(வுப்) பதிவு எனப்படும். நிகழ் பதிவைக் குறிக்கும்  minute book-  நிகழ்ச்சிப்பதிவேடு – நிகழேடு என்று அழைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி வரிசையைக் குறிக்கும் agenda  நிகழ் நிரல் ஆகும்.

minute என்றால் நிமிடம் என்றுதானே பொருள்?

நிமையம், நுட்பமான; நுண்ணிய,மீச்சிறு, நுட்பமான, மணித்துளி,

குறுங் கோணஅளவு எனப் பல பொருள்கள் உள்ளன. இவைபோல் நிகழ்ச்சிப் பதிவையும் குறிக்கிறது. ஒவ்வொரு      நிமைய நிகழ்வையும் விடாமல் குறிக்க வேண்டும் என்பதற்காக இங்ஙனம் கூறுகிறார்கள் எனக் கருதத் தோன்றும். ஆனால், காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. சிறு குறிப்புகள் என்னும் பொருள் கொண்ட minuta scriptura என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது. கூட்டத்தின் குறிப்புகள் குறித்த ஆவணமே நிகழ் பதிவேடு.

Tuesday, October 7, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி)

என்று உள்ளது

“என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம்.

எனத் தெரிவிக்கிறேன்

எனக் கூறினான்

எனச் சொல்லேன்

எனப் படிக்க வேண்டும்

எனத் திட்டமிடு

எனத் தெளிவாகக் கூறு

எனத் தெரிவித்துக் கொள்கிறேன்

எனப் பாராட்டினார்

எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது

எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனப் பெருந்தலைவர் தெரிவித்தார்

எனக் கேட்டார்

எனப் பார்த்தேன்

எனச் சொன்னார் எனச் சொல்லப்பட்டது

எனப் ‘பிரதமர்’

எனத் தலைமையமைச்சர்

எனப் பாதுகாப்பு அமைச்சர்

எனத் துறைத் தலைவர்

எனத் துறைத் தலைமைக் கண்காணிப்பாளர்

எனத் திட்டவட்டமாக

எனத் தகவல்

எனப்பொதுப்பணித்துறை அமைச்சர்

எனக் கல்வியமைச்சர்

எனச்சொன்ன உயர்நீதிமன்றம்

எனச் சிந்திக்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் என்பதை என்னும் சொல்லிற்கு அடுத்து வல்லினம் மிகும்

இச்சொல் அடிக்கடிச் செய்திகளில் இடம் பெறுவதால் நினைவில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

என்பதைத் தெரிவிக்கிறேன்

என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்

என்பதைப் பாராட்டினார்

என்பதைச் சொன்னார்

என்பதைப் பகர்ந்தனர்.

இதைப்போல் “இனி’ என்னும் இடைச்சொல்லிற்குப் பின்னும் வல்லினம் மிகும்.

இனிக் கடிந்து பேசாதே

இனிச் சரியாகச் செய்

இனித் திட்டமிட்டுச் செயலாற்று

இனிப் பாடலாம்

இனிப் பின்பற்ற வேண்டும்

இம்முகவரியில்

பெரியக்குளம்

எனக் குறிக்கப்பட்டுள்ளது தவறாகும்.

பெரியகுளம் என்பதே சரி

சிறிய. பெரிய. சிறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

சிறிய திட்டம்       சிறுசேமிப்பு

சிறு பாசனம்        சிறு பேழை

பெரிய பதவி       பெரிய குடிசை

சிறு கடை    பெரிய துறை

சிறு பெட்டிக்கடை       சிறு தெய்வ வணக்கம்

பெரிய பண்ணை

பெரிய தொல்லை

என்பன போல் வரும்.

இவைபோல் நல்ல. கெட்ட என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது

நல்ல தலைமைநல்லதிட்டம்

நல்ல புத்தகம் கெட்ட கனவு

நல்ல பாம்பு  நல்ல பயிர்

நல்ல துறை  கெட்ட குவளை

காசாளரோ அல்லது கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் என இவ்வலுவலக ஆணையில் உள்ளது.

இங்கு “ஓ’ அல்லது என்னும் பொருளில் கையாளப்படுகிறது. எனவே அல்லது என்பதைச் சேர்க்க வேண்டா.

காசாளரோ கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும். இல்லையேல்இ “காசாளர் அல்லது கணக்கர் பொறுப்பேற்க வேண்டும்’

எனல் வேண்டும்

எனவே.

செயலரோ துணைச் செயலரோ

ஊதிய விடுப்போ ஊதியபின் விடுப்போ

மாற்றுப் பணியிலோ பசுரப் பணியிலோ

தட்டச்சரோ சுருக்கச்சரோ

இசைவுடனோ இசைவின்றியோ

ஆசிரியப் பணியாளரோ ஆசிரியரல்லாப் பணியாளரோ

பிணையிலோ பிணையின்றியோ

ஊதியத்துடனோ ஊதியமின்றியோ

என “அல்லது’ என இடையில் சேர்க்காமல் குறிப்பிடுவது முறையாகும்.

Followers

Blog Archive