வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி)
  1. எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி!
  2. கற்றதன் பயனாக அறிவர்வழி நட!
  3. நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட!
  4. துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்!
  5. இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்!
  6. நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்!
  7. மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்!
  8. துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்!
  9. தலையால் நற்குணத்தானை வணங்கு!
  10. அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி 
    நில்!
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்