எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால் – வெற்றி கண்டுவிட்டார் என்றால் – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமையமைச்சர்பொறுப்பேற்கும்வகையில்வெற்றிகண்டுள்ளநரேந்திர(மோடி)க்குப்பாராட்டுகள்!
இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவே, பா.ச.க.வைமட்டும் குற்றம் கூறிப் பயனில்லை. தேர்தல் ஆணையத்தைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டது, வருமானவரித்துறை முதலான மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகளைத் தன் போக்கில் அமைத்து எதிர்க்கட்சியிினரையும் எதிர்ப்பவரையும் மிரட்டுவது, படைத்துறைச் செயல்பாட்டைத் தனிப்பட்ட வெற்றியாகத் திரித்துப் பரப்புவது போன்ற செயல்பாடுகளைப் பேராயக்(காங்.)கட்சி ஆட்சியிலிருந்தாலும் செய்திருக்கும். ஆள்வோருக்கு இப்படி வழிகாட்ட என்றே தன்னல அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, பா.ச.க.வைமட்டும் குறை கூறிப் பயனில்லை.
பா.ச.க.ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மகாராட்டிரக் கூட்டுறவு வங்கி ஊழல் முதலான பல ஊழல் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் நரேந்திர(மோடி) தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டு ஊழலற்ற கட்சி எனப் பா.ச.க.வையும் ஊழலற்றவர் எனத் தன்னையும் மக்கள் பாராட்டுவதாகப் பரப்புரை மேற் கொண்டார். உண்மை உறங்கியது; அவரது சொல்வன்மை வென்றது; ஆட்சிக்கட்டிலில் தொடர்கிறார்.
பணமதிப்பிழப்பிற்கு முன்னர், 2016 ஆகத்து முதல் நவம்பர் 8 வரை, பீகார், உ.பி., தில்லி, அரியானா, இராசசுத்தான் போன்ற பல மாநிலங்களில் பா.ச.க.வினர் கோடிக்கணக்கான பணத்தை வங்கி வைப்புக் கணக்குகளில் செலுத்தினர். அதன்பின்னரே பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்தது. இதன் மூலம் பலகோடிக் கணக்கான பா.ச.க.வின் பணம் காப்பாற்றப்பட்டது. இவ்வாறு விக்னேசு சய்சுவால்(தகவல்உரிமைச்சட்டப்போராளி,தில்லி) முதலான பலரும் மெய்ப்பித்தனர். திருமணம் முதலான ஆடம்பர விழாக்களைப் பா.ச.க.வினர் நடத்தினர். பா.ச.க.வினர் கணக்கின்றிப் புதிய பணத்தாள்களை மாலையாக அணிந்து கொண்டு படங்கள் எடுத்து வெளியிட்டனர். மக்கள் தாங்கள் பட்ட இன்னல்களையும் தங்களில் சிலர் மடிந்த துயரங்களையும் மறக்கும் வகையில் நரேந்திர(மோடி) இனிமையாகப் பேசினார்; வெற்றி வாகை சூடினார்.
பதினைந்து நூறாயிரம் விலையிலான குப்பாயம்(கோட்டு) அணிந்து கொண்டு கூச்சமின்றி ஏழைத்தாயின் மகன்எனச்சொல்லிமக்களைஏமாற்றிவருவது.
நம்நாட்டில் இருப்பதைவிடப் பிறநாடுகளில் மிகுதியான காலம் இருப்பது.
எனக் கணக்கிலடங்காக் குறைகள்இருப்பினும்அமித்துசா, நரேந்திர(மோடி) சிறப்பாகச்செயல்பட்டு வெற்றியைஈட்டியுள்ளனர்.
எனவே, 6 திங்களேனும்புதியஅரசைக்குறைகூறாமல்அவர்கள் போக்கில்ஆளவிடவேண்டும். அதுதான்மக்கள்முடிவிற்குஅளிக்கும்மதிப்பாகும்.
அதேநேரம், நரேந்திர(மோடி) தன் கட்சிக்குவாக்களிக்காத மாநிலங்களைப் புறக்கணிக்காமல், அம் மாநில மக்கள்புறக்கணித்தகாரணங்களைஉணர்ந்துஅவற்றைச்சரிசெய்யவேண்டும்.
அனைத்து இந்தியத் தேர்வு முறைகளை அகற்ற வேண்டும்.
இந்தி, சமற்கிருதத் திணிப்புகளைக் கைவிட வேண்டும்.
மக்கள் நலன்களுக்கு எதிரான செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம், கூடங்குளம் அணுமின்னகம், நெடுவாசல் நீரகக் கரிமம் (Hydro Carbon) திட்டம் போல் நாடு முழுவதும் உள்ள மக்கள்அழிப்புத் திட்டங்களை ஒழிக்க வேண்டும்.
பா.ச.க.வளர்ச்சிக்கானகருத்துகள்வருமாறு:
கடந்தமுறைஆட்சிக்கு வந்ததும்உடனிருந்ததோழமைக்கட்சித்தலைவர்களைப்புறக்கணித்ததுபோலஇல்லாமல், தமிழகத் தோழமைக் கட்சித் தலைவர்களுக்குப் பதவிகள் வழங்க வேண்டும்.
பா.ச.க.வின் ஒற்றை உறுப்பினராக இருந்த பொன்.இராதகிருட்டிணனுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் அதிகாரமற்றத் துணை அமைச்சர் என்னும் பொம்மைப் பதவி வழங்கப்பட்டது. இம்முறை யாரும வெற்றி பெறாக் காரணம் அவர்கள் அல்லர். பா.ச.க.வின் கொள்கையே! தமிழ்நாட்டுத் தோல்விக்குத் தமிழகத் தலைவர் தமிழிசை காரணமானவர் அல்லர். எனவே, இந்த அளவிற்காவது வாக்குகளைத் திரட்டித் தந்த தமிழிசைக்குஅமைச்சர்பதவியும்மாநிலங்களவைபதவியும்வழங்கவேண்டும்.
No comments:
Post a Comment