“இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன்  தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும் பிறரது கருத்துகளையும் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் எனக் கருதுகிறேன். நிறைவுரை ஆற்ற என்னை அழைத்த கவிஞர் செவ்வியன் அவர்களுக்கும் அன்றில் இறைஎழிலன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர் செவ்வியன் தெரிவு செய்துள்ள இச்சிக்கல்களை ஆராய்ந்து தீர்த்தாலே நாடு நலம் பெறும் மக்கள் வளம் பெறுவர்.

  முதலில் அனைவரின் பேச்சுகளையும் அறிந்து அதற்கேற்ப என் கருத்துகளைப் பதியலாம் என எண்ணியிருந்தேன். அக்கருத்துகொண்டிருந்த கவிஞர் செவ்வியன், பின்னர் இவ்வாறு உரைகளின் அடிப்படையில் உரையாற்றும் பொழுது வெட்டியும் ஒட்டியும் அமைவதாக நிறைவுரை அமையுமேன்றி, என்னுடைய கருத்துகளை அறிய  வாய்ப்பிருக்காது; ஆதலின்  தலைப்புகளின் அடிப்படையிலான என் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டினார். ஆதலின், அதற்கிணங்க இத் தொடர்  சொற்பொழிவில் ஆற்றிய உரைகளின் தலைப்புகள் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இதழ்கள் நடத்தி அவற்றின் வழியே தமிழ்ப்பணிகள்ஆற்றியவர்.  இன்றைய தலைப்புகள் குறித்து  அருடைய கருத்துகள் இன்றும் பொருந்துவனவாக அமையும் வகையில் நாட்டில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. அவற்றில் சிலவற்றையும் நான் இடையிடையே படித்துக் காட்ட உள்ளேன்.

  இத் தொடர் சொற்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகள் வருமாறு : –

பொதுத்தலைப்பு: இன்றையச் சமூகச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

1. (01.09.2012)  தொடக்க விழா

2. (08.09.2012) ஆசிரியர் – நிருவாகம் – பெற்றோர் – மாணவர் உறவுகள்

 3.(15.09.2012) தமிழகத்தில் ஆட்சிமொழியும் பயிற்று மொழியும் ஒன்றியத்தோடு தொடர்புடைய மொழி

4. (22/09/12) இந்திய ஒன்றியமும் மாநிலத் தன்னாட்சியும்

5. (29/09/12) கல்வி அரசு பள்ளி வழியாதனியார் பள்ளி வழியா?

6. (06.10.12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஏன்எந்த வழியில்?

7. (13/10/12) கல்வி அருகமைப் பள்ளி மூலம்சமச்சீர்க்கல்வி ஏன்எவ்வாறு?

8. (20/10/12) பொதுநல்வாழ்வு – அரசின் போக்கும் மக்களின் கடமையும்

9.(27/10/12) ஊழலும் கையூட்டும் : அரசின் கட்சிகள்அரசு ஊழியர்கள்,பொதுமக்கள்

10.(03/11/12) விலை ஏற்றமும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புப் போராட்டமும்

11. (10.11.12)  இலவயங்கள் – விலையில்லாப் பொருள்கள் – பண்பாடு – ஒழுக்கம- முயற்சி ஆகியவற்றின் அழிவு -அரசியல் கட்சிகள் எதிர்த்துப்போராடாதது

12. (17.11.12) இட ஒதுக்கீடும் சலுகைகளும் சாதி மத அடிப்படையிலாபொருளியல் அடிப்படையிலா?

13. ( 24.11.12) வேலையில்லாத் திண்டாட்டம் உண்மையா?  பொய்யாஉண்மையெனில் தீ்ர்வு என்ன?

14. (01.12.12)  சாதி வெறியும் தீண்டாமை ஒழிப்பும் – பெரியாரின் பங்கு – இவை ஒழியக் காரணங்கள் எவைதீர்வு எவ்வாறு?

15. (08.12.12) உற்பத்தி: பொதுத்துறை – கூட்டுறவுத் தறை – தனியார் துறை- உற்பத்தித் தேவையை நிறைவு செய்யவா?  ஆதாயம்(இலாபம்) ஈடடவாஆதாயம் எனில் ஆதாய விழுக்காட்டை வரையறுப்பது யார்?

16. (15.12.12) இயற்கை வளங்கள் கொள்ளை – காரணம் யார்அரசாதனியார்களா?

17. (22.12.12) முனைப்புவாதமும்(தீவிரவாதமும்) வன்முறையும் ஏன்எப்போதுதீர்வுக்கு என்ன வழி?

18. (29.12.12) பண்பாட்டுச் சீரழிவுக்குப் பொறுப்பு :திரைப்படம் – சின்னதிரை – விளம்பரம் – தணிக்கைத் துறை – பெற்றோர் மரபுவழிப் பண்பாட்டைக் காப்பாற்றுதவற்கான போராட்ட வடிவம் என்ன?

19. (05.01.2013)  இன்றைய  குமுகாய அமைப்பில் மண முறிவுகள் – குடும்பச் சீரழிவுகள் – காரணம் என்னதீர்வு என்ன?

20. 12.01.13 அரசியல் கட்சிகள் – சாதியக்கட்சிகள் – மதக்கட்சிகள் ஆகியவற்றின் பெருக்கம் வளர்ச்சியின் அறிகுறியாசீரழிவா?  இந்தியக் கூட்டரசில் எத்தனைக்கட்சிகள் இருக்க வேண்டும்மாநிலக் கட்சிகள் தேவைதானா?

21. 19.01.13  ஆட்சி நிருவாகமும் தேர்தல்முறையும் : அழிவுக்குக் காரணம் அரசியல் கட்சிகளாஅரசுப் பணியாளர்களாவாக்காளர்களா?

22. (26.01.2013) நிறைவு விழா

  தொடக்கமாக நான் ஒரு கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன்.

 மொழிப்போர் ஈகியருக்கான வீர வணக்க நாள்நடைமுறைக்கிணங்க நேற்று (சனவரி 25)  நிகழ்த்தப்பட்டாலும் உண்மையில் இன்றுதான் வீர வணக்க நாள். முதலில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டதும் சனவரி 26ஆம் நாளைத்தான். இன்றுதான் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கு,  ஈகியருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய நாள்.  வரலாற்றில் துக்கநாளாக அறிவிக்கப்பட்ட இந்த நாளில் தொடர்பொழிவின் நிறைவு நிகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால்தொடர் பொழிவுகளில் இந்தி எதிர்ப்புப் போரைப்பற்றியோ தமிழ்க்காப்புப்போர் பற்றியோ ஒரு பொழிவும்  அமைக்காதது வியப்பாய் இருக்கிறது. மன்பதைக்குத் தேவையான சிக்கல்கள்பற்றி நன்கு ஆராய்ந்து தலைப்புகள் தந்த,  மொழிப்போர் குறித்து நூல் எழுதிய கவிஞர் செவ்வியன் அவர்கள் ஏன் இதை விட்டு விட்டார்  என்று தெரியவில்லை. இருப்பினும்,  ஆட்சி மொழிபயிற்றுமொழிஒன்றிய மொழி குறித்தும் கல்வி குறித்தும் தலைப்புகள் உள்ளமையால் அவை பற்றிய தலைப்புகளில் இந்தி முதன்மை குறித்தும் தமிழ்க்காப்பு குறித்தும் காணலாம்.

(தொடரும்)