Wednesday, August 27, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி)

நூற்குறிப்பு     2

பொருளடக்கம் 5

நூற்பகுப்பு 7

எழுத்ததிகார இயல்கள்   7

சொல்லதிகார இயல்கள்  7

பொருளதிகார இயல்கள்  7

நூற்பாக்களின் எண்ணிக்கை   8

பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9

அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை      9

பெயர்க்காரணம்     10

நூற்சிறப்பு      10

தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு   11

முதனூல் 12

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன     13

மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    13

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில      14

பாணினியம் முதல் நூலல்ல   14

பாணினியத்தின் காலம்   14

பாணினியத்தின் சிறப்பு?!  14

பதஞ்சலியின்   திட்பத்தைத்   தன்னுள்   கொண்டும் பாணினியின்   செறிவுதனைத்   தன்னுள்   கொண்டும்   16

தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே     17

மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார் 18

விழுமிய நூல்  19

பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல்    19

தொல்காப்பியரைப் பின்பற்றிய யாசுகர்   19

வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு 20

கணிணி நிரன்மையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளார்   21

உலகம் போற்றும் தொல்காப்பியம்  22

தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும்.   23

உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே.    23

கவிதை வாயிலாகத் தொல்காப்பியத்தின் சிறப்பு     23

பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம்  25

முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர் 26

தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்    26

பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி    28

ஒலியன்கள்    28

அரித்தாட்டில் காலத்திற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நடைமுறையில் இருந்த தமிழ்நெறி 28

மொழியியலின் மீவுயர் பேராசன்     28

இடைச்செருகல்கள்  29

இடைச்செருகல்கள் இருவகை  30

‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019) 31

இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்      32

தொல்காப்பியம் – ஒரு கவிதை இலக்கண நூல்      33

காலம்     33

தொல்காப்பியர் திருவள்ளுவருககுக் காலத்தால் முற்பட்டவர்      33

ஆரியர் வரவு   34

உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன    35

கருத்துகளை உள்வாங்குதற்கும் மேற்கோளாகப் பயன்படுத்துவதற்கும் துணை நின்ற நூல்கள்   35

Sunday, August 24, 2025

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

      25 August 2025      கரமுதல



கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில் பெரும்பாலோரின் கட்டுரைச் சுருக்கங்களுக்கும் முழுமையான கட்டுரைகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அவ்வாறு நேரக்கூடாது என்பதற்காக 46 பக்கக் கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். அதைப்படித்த ஒருவர் கனடாவிலிருந்து “நீங்கள் இலக்குவனாரின் மேற்கொள்களை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்களே! அவரைப்பற்றி மேலும் ஒருவர்தான் எழுதியுள்ளார்” என்றார். “என்னிடமும் சிலர் எழுத வேண்டும் என்பதற்காக அவரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ நூலைக் கேட்டனர். என்னிடம் இன்மையால் வெளியீட்டகத்தின் பெயரைக் குறிப்பிட்டேன். அவற்றை அவர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால், வாங்கவில்லை. இதுபோல் நூல்கள் கிடைக்காமல் எழுதாமல் இருந்திருக்கலாம். இதனால் ஒன்றுமில்லை” என்றேன். “இல்லையில்லை! உங்கள் அப்பாவின் கருத்துகளில் இருந்து மட்டும் எடுத்தாண்டுள்ளீர்கள்” என்றார். (அப்பொழுது நான் அவ்வாறுதான் எழுதியுள்ளதாக எண்ணி விட்டேன். பொதுவாகக் கட்டுரை எழுதியவுடன் மறக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் பின்னர் நான் பார்த்த பொழுது முப்பதிற்கும் மேற்பட்டவர்களின் மேற்கோள்கள் இருந்தன.) “அப்பா என்று பார்க்காதீர்கள். அவர் படிக்கும் பொழுதே தொல்காப்பிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் என அழைக்கப்பெறுபவர்; ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றியவர். எனவே, அதில் தவறு இல்லை” என்றேன். மாற்றித் தருமாறு கேட்டார். “பொருண்மை குறித்துத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டு அவை தவறு எனச் சொல்வதை விடச் சரியான கருத்துகளை மட்டும் எழுதினால் போதும் என எண்ணுபவன் நான். எனவே, அதற்கேற்ப எழுதியுள்ளேன். கருத்து மாறுபாடு இயற்கையே. கருத்தரங்கக் கலந்துரையாடலில் மாறுபாடாகக் கருதும் கருத்துகளைக் குறிப்பிட்டால் விளக்குகிறேன்” என்றேன். அவர் அவரது நிலையிலேயே நின்றார்.  “இக்கட்டுரை சரியில்லை என்றால்  நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டா. எனினும் இதை நான் அச்சிட்டு அனைவருக்கும் தருவேன்” என்றேன். காலங்கடந்து கட்டுரைச் சுருக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அயலகத் தமிழறிஞர் ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது. அவர் என் கட்டுரை ஒன்றைக் குறித்துச் சில ஐயங்களைக் கேட்டு இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளனவா என்றார். நான் குறிப்பிட்டுத் தெரிவித்தேன். அவர், உடனே “நான் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டேன். எனவே அண்மையக் கருத்துகளை அறிய முடியாமல் போய்விட்டது. எனவேதான் எனக்குப் புரியாமல் போய்விட்டது” என்றார்.. அதுபோல்தான் பேசியவருக்கும் அக்கருத்தை அவரிடம் தெரிவித்தவருக்கும் தவறான கருத்துகள் தெரிந்த அளவிற்கு தொடர்பான ஆய்வுரைகள் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருந்திருக்கும் எனக் கருதுகிறேன். இணையத் தேடலில் பல கருத்துகளை அறிய முடியும் என்றாலும் அவை பெரும்பாலும் தவறான கருத்துகளாகவே உள்ளன. நல்ல சரியான ஆய்வுரைகள் யாவும் இணையத்தில் இடம் பெற வேண்டும்.

ஆரிய நூல்களைக் காலத்தில் மூத்ததாகவும் தமிழ்நூல்களைவிட மிகவும் சிறப்பானதாகவும் திரித்துக் கூறுவோரும் அவற்றை அறிந்தும் அறியாமலும் பரப்புவோரும் உள்ளமையால் தொல்காப்பியத்தைவிடக் காலத்தில் பிந்தியதாகவும் அதனுடன் ஒப்பிட இயலா அளவிற்குத் தரம் குறைந்ததாகவும் உள்ள பாணினியத்தை உயர்வானதாகவும் காலத்தால் மூத்ததாகவும் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். அவற்றை முறிடியடிக்க வேண்டும் என்று எழுந்ததே இக்கட்டுரை. 100 பக்கங்களுக்கு மேல் குறிப்புகள் எடுத்திருந்தாலும் ஏ 1 அளவில் ஏறத்தாழ 35 பக்க அளவில் விரிவுக் கட்டுரை அமைந்தது.

இவ்விரிவுக் கட்டுரையைத் தமிழன்பர்கள் பார்வைக்கு நூலாக  வெளியிட்டுள்ளேன். நூல் அட்டை வடிவமைத்த வடிவமைப்புத் தளத்தினருக்கும் அச்சிட்ட மாணவர் நகலகப் பார்த்திபன் நண்பர்களுக்கும் நூல் வெளியீட்டிற்கு உதவியாக இருந்த பொறி தி.ஈழமலர் பாலாசி, பொறி தி.ஈழக்கதிர், மலர்க்காெடி வெளியீட்டகத்தின் திருவாட்டி தி.அன்புச்செல்வி ஆகியோருக்கு நன்றி.

 கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு தன் தலைமையில் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியிருந்தாலும் அதுபோது இந்நூலை வெளியிட இயலாமல் போய்விட்டது. எனினும் இதன் தொடர்ச்சியாகச் சென்னையில்,  நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசி 26, 2055 / சனி / 12.10.2024 அன்று இலக்குவனார் இலக்கிய இணையம் விருதளிப்பு நிகழ்ச்சியை நடத்தியது.   இது போழ்து இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

சிறிய நூல் என்பதால் இதிலுள்ள கருத்துகளை முன்னுரையில் எடுத்துக் கூறத் தேவை எழவில்லை. எனவே அன்பர்கள் இந்நூலைப் படித்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

நன்றி.

Saturday, August 23, 2025

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – தொடர்ச்சி)

தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம்.  இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புறத் தமிழ்ப்பகைவர்களும் அகத்தமிழ்ப்பகைவர்களும் தமிழின் பெருமையை மறைக்கும் வகையில் குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையே புனைகதைபோல் திரித்துக் கூறி வருகின்றனர். என்றாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் இப்போது கடல்கோள் சுனாமி என்ற பெயரில் நிகழ்ந்து வருவதையும் தமிழ்நாட்டில் 2004 திசம்பரில் நிகழ்ந்ததையும் பார்க்கும் நமக்குக் கடல்கோள் என்பது உண்மையே எனத் தெரிய வருகிறது. ஆழிப்பேரலை என்றாலும் அது கடல் கோள்தான்.

சிலப்பதிகாரத்தில் தமிழ்த்தேசியப் பெரும்புலவர் இளங்கோ அடிகளும் இது குறித்துப் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப்பதிகாரம் 11:17-22)

பஃறுளியாறும் பக்க மலைகளை அடுக்கடுக்காகக்கொண்ட குமரி மலையும் கடலால் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையை இவ்வடிகள் மூலம் இளங்கோ அடிகள் உலகிற்குத் தெரிவிக்கிறார்.

இளங்கோ அடிகளே,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம், வேனிற்காதை:1-2) என்றும் குறிப்பிடுகிறார்.

“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவான விளக்கம் தருகிறார்.

 “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.” என்கிறார்.

காதம் என்றாலும் காவதம் என்றாலும் பத்து கல் அஃதாவது 16 புதுக்கல்(கி.மீ.) தொலைவு எனப் பொருள். 700 காவத ஆறு என்றால் 11,200 புதுக்கல் நீட்சியுடையது எனப் பொருள். இவ்வாறு ஆற்றின்பரப்பளவு, நாடுகளின் பெயர்கள் முதலியவற்றை அடியார்க்கு நல்லார் வரலாற்றுக் குறிப்பாகவே தருகிறார்.

மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் புகார் நகர் கடலில் புகுந்ததைக் கூறுகிறார். ஒருவேளை குமரிக்கண்டத்தின் பக்கவாட்டு நீட்சி புகார் வரை இருந்திருக்கலாமா என ஆராய வேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் எழுதப்பெற்ற காலம்தான் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு. அவை அதற்குப்  பல நூறு ஆண்டுகள் முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர். அவ்வாறாயின் குமரிக்கண்டம் கடல் கொண்டதுடன் இதையும் தொடர்பு படுத்தினால் தவறில்லை எனலாம்.

ஆரியப் புராணங்களிலும் தொன்மக்கதைகளிலும் வரும் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கற்பனைகளையெல்லாம்  வரலாற்றுச் செய்திகளாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோர் தமிழ் இலக்கியங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளை யெல்லாம் கற்பனைக் கதைகளாகத் திரித்துக் கூறுகின்றனர். இதனை முதலில் படிக்க நேரும் வெளிநாட்டினரும் இவற்றை உண்மையாகக் கருதி உண்மையான தமிழக வரலாற்றைக் கற்பனையாகக் கூறி விடுகின்றனர்.

எனவே, மறைந்த நிலப்பகுதியின் பெயர் என்னவாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னன் ஆட்சி வரம்பில் இருந்த தமிழ்நிலம் கடலால் விழுங்கப்பட்டது என்பதே உண்மை. எனவே, அப்பகுதி மக்கள் தமிழ்மக்கள் என்பதும் அம்மக்கள் பேசிய மொழி தமிழே என்பதும் மிக உண்மை. எனவே, அங்கே இருந்த தமிழினமே கடல்கோள்களாலும் பூமித் தட்டு நகர்வுகளினாலும் சிதறிய புவிப்பரப்பில் அங்கு வாழ்ந்த மக்களும் சிதறி வாழ்ந்துள்ளனர்.

அதுபோல் கடலால் கொள்ளப்பட்ட தென்னாட்டில் பேசப்பட்ட தமிழ்மொழியே உலகெங்கும் பரவி பல மொழிகளாகக் கிளைத்துள்ளது எனலாம். அவ்வாறெனில் உலக மொழிகளின் தாய் தமிழ் என்பதே பெரும் உண்மை. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் தமிழ் திகழ்கையில் கன்னடத்திற்கும் தமிழே தாய் என்பதும் உண்மைதானே!

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது

கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று  என்பதைப்   பேரா.அ.திருமலைமுத்துசுவாமி(தமிழ்நாடும் மொழியும்) கூறுகிறார். இவர்போல் அறிஞர்கள் பலரும் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.

Sunday, August 17, 2025

காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்



    நளி இரு முந்நீர் ஏணி ஆக,
    வளி இடை வழங்கா வானம் சூடிய
    மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
    முரசு முழங்கு தானை மூவர்

    (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4)

    புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார்.

    இப்பாடல் உழவின் சிறப்பையும் பல அறிவியல் உண்மைகளையும் கூறுகிறது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.

    நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்;

    நளியென் கிளவி செறிவு மாகும்” (தொல்காபபியம், உரி: 25) என்பதனால், “நீர் செறிந்த கடல்”; ஏணி எல்லை; வளி = காற்று; திணி = செறிவு; கிடக்கை = நிலம்; தண் = குளிர்ந்த; தமிழ் = தமிழ் மக்களுக்கு; கிழவர் = உரிமையுடையவர்; தானை = படை

    நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாகவும் காற்று இல்லாத – அஃதாவது காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்ததாகவும் உடைய மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ச்சியான தமிழ்நாட்டிற்கு உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தர்.

    ‘தமிழ்’ என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை என்றும் திராவிடம்தான் தமிழ் ஆனது என்றும் அறியாமலும் அறிந்தே தவறாகவும் சொல்வோர் இருக்கின்றனர்.

    அவர்கள் கருத்துகள் யாவும் பொய் என்பதற்கு இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்லின் பயன்பாடு பல இடங்களில் உள்ளமையைக் குறிப்பிடலாம்.. அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் இதுவும்.

    இங்கே தமிழ் என்பது தமிழ்மொழி பேசும் மக்களையும் தமிழ் மக்கள் வாழும் நிலத்தையும் குறிக்கிறது.

    இப்பாடலில் உழவர் பெருமை, வரித்தள்ளுபடிக்காகப் புலவர் வேண்டுதலும் அதனை வேந்தர் ஏற்றலும் ஆகிய அருமை ஆகியவற்றுடன் அறிவியல் உண்மைகளையும் அறியலாம். அவற்றில் ஒன்றையே இங்கே பார்க்கப் போகிறோம்.

    வானத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் காற்று இல்லை என்னும் அறிவியல் உண்மையை, அத்தகைய காற்று இல்லாத வான்மண்டிலத்தைப் பிறர் அறியாப் பழங்காலத்திலேயே நம் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

    பஞ்ச பாண்டவர்களில் குந்திக்கும் வாயுவுக்கும் பிறந்தவன் பீமன் என்றும் வாயுவுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்றும் ஆரியப் புராணங்கள் கூறுகின்றன.

    ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றின் அறிவியல் உண்மையை உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.

    ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கிரேக்கர்கள் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும் (Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும் விண்கடவுளின் (Uranus) மகன் என்றும் உரோமர்கள் துயரத்திற்கும் (Chaos) இருளிற்கும் (Caligo) பிறந்த மகன் என்றும் கருதினர்.

    இவ்வாறு காற்றினை ஒவ்வொரு நாட்டினரும் கடவுள்களின் அல்லது தேவதைகளின் குழந்தையாகக் கருதினர்.

    காற்றினை இயற்கையாக மேனாட்டார் கருதாக் காலத்திலேயே காற்றின் பல் வேறு தன்மைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். அத்தகைய தமிழ் இலக்கியங்கள் கூறும் காற்றறிவியலின் ஒரு கூறுதான் இப்பாடல்வரி.

    காற்று இல்லாத வானப்பகுதி குறித்து மேலும் சில பாடல்களிலும் காணலாம். இப்பாடலில் தமிழ் நிலத்தைக் குறிப்பிட வந்த புலவர் உலகத்தின் பகுதியாகக் குறிப்பிடுகிறார்.

    அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் வானத்தைக் கூரையாகக் கொண்ட உலகின் பகுதி என்கிறார்.

    வானத்திற்கு அடைமொழியாகக் காற்று வழங்காத வானம் என அறிவியல் உண்மையுடன் அடைமொழி தருகிறார்.

    வளி இடை வழங்கா வானம் என்னும் சங்கப் புலவர் பொன்னுரையை ஓர்ந்து காற்று இல்லாத வான் மண்டிலத்தை அறிந்தவர்கள் நம் முன்னைத் தமிழர்கள் என்பதை உணர்ந்து அறிவியல் தமிழ் வளத்தைப் பெருக்குவோமாக!

    தாய் மின்னிதழ் 16.08.205

    Saturday, August 16, 2025

    தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்



    (தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி)

    கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம்                நூலாசிரியர்.

    தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த

    கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க

    நூலறி புலவர் நுவன்ற நெறியிது

    வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51)

    சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கன்னட மொழியில் வடெமாழிக் கலப்பு

    காவிய அழகினைச் சிதைத்திடும் கண்டீர்

    பின்வரும் பாடல் வடமொழி பிணைந்ததால்

    பறைஒலி போலக் கடூரம் பயக்கும்  (56)

    தெளிவுற இதனைத் தெளிந்து கொள் ளாமல்

    கன்னட மொழியுடன் வடமொழி புணர்த்தித்

    தொகைநிலை ஆக்குதல் கொதிக்கும் பாலில்

    மோர்த் துளி சேர்ப்பதுபோலக் குற்றமாம் (58)

    கன்னடப் புலவர் கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அதைக் கொதிக்கும் பாலில் மோர்த்துளி சேர்ப்பதுபோலக் குற்றம் என்றும் வன்மையாகத் தெரிவிக்கிறார்.

    பொதுவாகத் தமிழ்க் குடும்ப மொழிகளைச் சேர்ந்தோர் தத்தம் மொழிகளில் உள்ள சமற்கிருதச்சொற்களை நீக்கிய பாடல்களைத் தங்களின் தனிமொழியாகக் கூறுவர். அஃதாவது தனிக்கன்னடம், தனித் தெலுங்கு, தனி மலையாளம் என்பர். அதுதான் தமிழ் என்று உணராமல் அவ்வாறு கூறுவர். அத்தவறான நம்பிக்கையால் தத்தம் மொழியைத் தமிழிலிருந்து தோன்றியதாகக் கூறக் காலங்காலமாக மனமின்றி இருக்கின்றனர்.

    துறை, மலை,  குளம், சேரி, ஏரி, ஊர், நகர், புரம், காடு,பட்டி, பொழில், தோப்பு, பாக்கம், பட்டினம், பட்டணம் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும் உள்ளன.  அவைபோல் கருநாடக ஊர்ப்பெயர் விகுதிகளும் உள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம்.

    பெங்களூரு , கோலார் , துமகூரு ,  மைசூரு ,  சிக்மகளூரு, சாமராசநகர், இராமநகரம், அச்சனூர், அடையாறு, கனகபுரம், குசால்நகர், கொல்லூர், தங்க வயல், பாகல்கோட்டை முதலிய பல ஊர்ப்பெயர்கள் தமிழ் ஊர் விகுதிகளுடனே உள்ளன. கருநாடக மாநிலம் என்பது ஒரு காலத்தில் தமிழ் நிலமாக இருந்ததுதான். தமிழ் நிலததில் வழங்கிய மொழி தமிழ்மொழியாகததானே இருக்க முடியும்? அப்பகுதியில் உரு மாறித் தோன்றிய கன்னட மொழி அப்பகுதி மூல மொழியாகிய தமிழில் இருந்துதானே வந்திருக்கும் என்பது இயற்கை நீதிதானே!

    கன்னடச் சொற்களைப் பார்த்தால் பெரும்பாலும் தமிழே எனத் தெளிவாகப் புரியும். அதற்குச் சான்றாக எண்ணுப் பெயர்களை இங்கே பார்ப்போம்.

    சுன்னம் (0)  சொன்னே

    ஒன்று  –   ஒந்து

    இரண்டு -எரடு

    மூன்று – மூரு

    நான்கு / நால் – நாலக்கு

    ஐந்து  –  ஐது

    ஆறு – ஆறு

    ஏழு – ஏளு

    எட்டு  –  என்டு

    ஒன்பது – ஒம்பத்து

    பத்து – ஃகத்து

    நூறு – நூறு

     எண்ணுப் பெயர்கள் தமிழில் இருந்து திரிந்ததை நாம் உணர்கிறோம். ஆனால் ஆயிரம் அவ்வாறு அல்ல எனக் கருதுவாரும் உள்ளனர். அது தவறு என்பதையும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் பின்வருமாறு கூறுகிறார். “ஆயிரம் என்னும் எண்ணிற்குக் கன்னடத்தில் சாவிர என்றும் தெலுங்கில் வேலு என்றும் பெயர்கள் வந்துள்ளமை எவ்வாறு என்று தெளியவில்லை.

    கன்னடச் சாவிர (சவர என்பதும் உண்டு) வடமொழியின் சகசிர என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றனர். தமிழ் ஆயிரமும் வடமொழிச் சகசிரத்திலிருந்து வந்திருக்கக் கூடுமென்று அவர் கூறுகின்றமை பொருத்தமுடைத்தன்று.     இப் பேரெண்ணைத் தமிழ்க் குடும்பத்தினர் வடமொழி யாளரிடருந்து கடன் பெற்றிருக்கக்கூடும் என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றமையும் உண்மைக்கு மாறுபட்டது. தமிழில் நூறாயிரம், கோடி கோடிக்கு மேற்பட்ட ஆம்பல், வெள்ளம் முதலிய எண்கள் ஆரியர் தொடர்பு கொள்வதற்கு முன்பே இருக்கக் காண்கின்றோம். அவ்வாறு இருக்க ஆயிரம் என்ற எண்ணுப் பெயரை மட்டும் ஆரியர்களிடமிருந்து தமிழர் கடன் வாங்கி இருப்பர் என்பது எவ்வாறு பொருந்தும்?”

    எனவே, கன்னட எண்ணுப் பெயர்கள் யாவும் தமிழில் இருந்து திரிந்தவையே எனலாம்.

    Followers

    Blog Archive