(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி)

               நல்லந்துவனார்கலித்தொகை 139, 1-3

நோ என்றால் துன்பம் எனப் பொருள்நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய்பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறதுஇங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது.

பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதும் அறத்தைச் செய்தல் சான்றோர் கடமை என்கிறார் புலவர் நல்லந்துவனார்.

பிற உயிரினத் துன்பத்தையும் தம் துன்பம்போல் ஒருநாள் கருதினால் போதாதுஎன்றும் கருத வேண்டும் என்கிறார் புலவர்இதுவே தமிழ் நெறி.

                (திருக்குறள் ௩௱௰௫  315)

என்கிறார் திருவள்ளுவரும்.

பிற உயிர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதாவிட்டால் அறிவினால் என்ன பயன் என்கிறார் திருவள்ளுவர்.

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்லபறவையினம்விலங்கினம்ஊர்வன இனம்நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

அடுத்தவர்க்கு வரும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுதல் சான்றோர்க்கே கடமை எனில் இந்த உயர்ந்த பண்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமல்லவா?

தன்னைப்போல் பிறரை நினை என்னும் விழுமிய ஒழுக்க நெறியை இப்பாடலில் புலவர் வலியுறுத்துகிறார்நாமும் இப்பொன்னுரையை என்றும் பின்பற்றுவோம்.