Friday, December 31, 2010

science in kurunthogai 2/5: Kurunthogai kuurum ariviyal seydhi 2/5


குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்


- இலக்குவனார் திருவள்ளுவன்

 (1/5 இன்  தொடர்ச்சி. இதன்தொடர்ச்சிப் பகுதிகளை  3/5, 4/5, 5/5 ஆகியவற்றில் காண்க.)
 
21. கள்ளி

இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும்.

கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி
வெண்பூதியார்: குறுந்தொகை:174:2
(நொடி - ஒலி)

கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும்.

பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு
மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5


22. காஞ்சி

காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய  பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள் போல பூங்கொத்துகள் இருக்கும்.

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
(உழவர் வாங்கிய) கமழ்பூ மென் கிளைக்
காஞ்சி
ஓரம்போகியார்: குறுந்தொகை: 10:2-4 22.



.
23.  காந்தள் (கோடல், தோன்றி)

காந்தள் பூக்கள் குருதி போன்று சிவப்பாகப்  பூக்கும்; கொத்தாக இருக்கும்.

குருதிப் பூவின  இலைக் காந்தள்
திப்புத் தோளார் : குறுந்தொகை: 1-14

காந்தள், மலையைச் சுற்றி வேலிபோல் இயற்கையாய் வளரும்.

காந்தள் வேலி ஓங்குமலை
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை : 76:1
காந்தள் வேலி
குறுந்தொகை : 100:3

காந்தள் மலர் மலைமுழுவதும் மணம் வீசும் அளவு நறுமணம் மிக்கது.

சிலம்புடன் கமழும் அலங்குலை
ஆசிரியர் பெருங்கண்ணனார்: குறுந்தொகை: 239:4


காந்தள் மலர் பல கோடுகள் உடைய பாம்பின் படம் சுருங்குவது போன்று இதழ் குவிந்து காட்சியளிக்கும். (கொண்டல் காற்றில் உதிர்ந்து விழும் இயல்புடையது.)

பல்வரிப்
பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்: குறுந்தொகை: 185:4-6
(செங்)காந்தள்  ஒளி மிகுந்ததாயும் இதன்  குவிந்தும் காணப்பெறும்.  சேவலின் கொண்டையைப் போல் இருக்கும்.

குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள்
மதுரைக் கண்ணனார்: குறுந்தொகை: 107:1-2




24. காயாம்

காயாம் கார்ப்பருவத்தில் மயிலின் கழுத்தைப் போல் பொலிவுடன் விளங்கும்; முதுவேனில் காலத்தில் வெப்பத்தால் வாடும்.

புல்லென் காயாப்  பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
ஔவையார்: குறுந்தொகை: 183:5-6
(எருத்து-கழுத்து)


25. குரவம்
குரவம் வேனிற்காலத்தில் பூக்கும் ; பல பூக்களாய் மலரும் 


பல்வீ பட்ட பசுநனைக் குரவம்
மிளைகிழார் நல்வேட்டனார்: குறுந்தொகை: 341:1


26.  குவளை

அகலமும் ஆழமும் உள்ள சுனைகளில் குவளை மலரும்

அகல்வாய் குண்டுசுனைக்
குவளை

மோசி கீரனார்: குறுந்தொகை: 59:2-3

குவளையின் தாள் குறுகியது.

                                                            குவளைக்
 குறுந்தாள்

 பாண்டியன்பன்னாடு தந்தான்: குறுந்தொகை: 270:6-7

பெண்களின் அழகிய கண்கள் குவளைமலர்போன்று இருக்கும்.

குவளை  அம்கண்
கபிலர்: குறுந்தொகை:13:5

குவளையின் இதழ்கள் மணம் மிக்கது. 

நாறிதழ்க் குவளை
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 62:2


குவளையின் பூவிதழ் கரிய நிறமாய் இருக்கும்.

மாயிதழ்க் குவளை
பேயார்: குறுந்தொகை: 339:6



27. குறிஞ்சி

குறிஞ்சியின் கொம்பு கரிய நிறத்தில் இருக்கும்.

கருங்கோல் குறிஞ்சிப் பூ
தேவகுலத்தார்: குறுந்தொகை:3:3


28. குளவி
காட்டு மல்லிகை மிகுந்த மணம் உடையது.

குளவி நாறும்
மோசிகீரனார்: குறுந்தொகை: 59:3

 29. கூதாளம்

கூதளங்கொடியின் தாள் குறுகியதாய் இருக்கும்.

குறுந்தாள் கூதள்
பரணர்: குறுந்தொகை: 60:1



வெண்கூதாளத்து மலர்கள் உள் துளையுடையன.
வெண்கூதாளத்து அம்தூம்பு புதுமலர்
நாகம் போத்தனார்: குறுந்தொகை: 282:6




30.  கொன்றை

கொன்றைப் பூங்கொத்துகள் பொன்நிறத்தில் இருக்கும். (எனவே, கொன்றை மரத்தின் தழையிடையே நீண்ட பூங்கொத்துகள் தெரிவது, பெண்கள் கூந்தல் இடையிடையே பொன் அணிகலன் களைச் சூடியது போல் இருக்கும்.)

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை
ஓதலாந்தையார்: குறுந்தொகை: 21:2-3

கொன்றை மரத்தின் அடிமரம் பருத்து இருக்கும்.
                              
          தடவுநிலைக் கொன்றை
கோவத்தனார்: குறுந்தொகை: 66:1


கொன்றைப்பூ தவளையின் வாய்போன்று உள்ள, (சதங்கை யிலுள்ள) பொற்காசு போல இருக்கும்.

தவளைவாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன  போதீன் கொன்றை
இளங்கீரந்தையார்: குறுந்தொகை: 148:2-3
(கிண்கிணி-சதங்கை)

கார்காலத்தில் கொன்றைப் பூக்கள் பசுமையாக விளங்கும்.

கொன்றைஅம் பசும் வீ  
ஔவையார்: குறுந்தொகை: 183:1

கொன்றையின் பூக்கள்  பொலிவுமிகுந்து இருக்கும்.
கொன்றை ஒள் வீ
பேயனார்: குறுந்தொகை: 233:2

31. கோங்கு

கோங்கு மலரும் பருவத்தில் இலைகள் முழுமையும் உதிர்ந்து இருக்கும்ங் அரும்புகள் மார் நுனி போன்று அழகாய்  மெல்லியனவாய்  இருக்கும்.

இலையில் அம்சினை இன வண்டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கு
பார்காப்பார்: குறுந்தொகை: 254:1-2


32. சந்தனம்

சந்தனம் மணம்மிக்கது

நறையகில்
பேயார்: குறுந்தொகை: 339:1

 
33. சேம்பு

சேம்பின் இலை யானையின் செவி போல் பெரியதாய் இருக்கும்.

சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மான
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 76:3-4


34. ஞாழல்

ஞாழலினது பூக்கள் வெண்சிறு கடுகைப் போன்று சிறியனவாய் இருக்கும்.

ஐயவி அன்ன சிறுவீ  ஞாழல்
குன்றியனார்: குறுந்தொகை: 50:1
ஞாழல் பசுமையான அரும்புகளையும் பல கொம்புகளையும் உடையது.

பசுநனை ஞாழல் பல்சினை
வடம வண்ணக்கனார்: குறுந்தொகை: 81:2

ஞாழலின் பூக்கள் சிறியனவாய் இருக்கும்.
சிறுவீ ஞாழல்
பரணர்:குறுந்தொகை: 328:1

ஞாழல் பூக்கள் நறுமணம் மிக்கதாய் இருக்கும்

நறுவீ ஞாழல்
அம்மூவானர்: குறுந்தொகை: 318:2

அரும்புகள் முதிர்ந்த ஞாழலின்  முட்டைபோன்று திரண்டு இருக்கும்.

நனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள் வீ  ’
அம்மூவனார்: குறுந்தொகை: 397:1

35. ஞெமை
ஞெமைமரத்தின் உச்சியில் பருந்து இருக்கும்.
                           
          ஞெமைத்தலை
ஊனசைஇ ஒரு பருந்து இருக்கும்
 தேவனார்: குறுந்தொகை: 285:6

36. தடா மரம்

தடா மரத்தின் கிளைகள் உயர்ந்து இருக்கும்.

தடவின் ஓங்கு சினை
 மதுரை மருதனிள நாகனார்:  குறுந்தொகை 160:3

37.  தாமரை
தாமரை மலர் பல இதழ்களை உடையது.

பல்லிதழ்
நரிவெரூஉத் தலையார்: குறுந்தொகை:5:5

ஆழமான நீர்நிலையில் தோன்றும் தாமரைமலரின் தாது சிறப்பானது
குண்டுநீர்த் தாமரைக் கொங்கு
சிறைக்குடி ஆந்தையார்: குறுந்தொகை: 300:3


38.  தாழம் பூ

தாழம்பூவின் மடலுக்கு ஈர்வாள் (இரம்பம்) போன்ற விளிம்பு இருக்கும்.

வாள்போல் வாய கொடுமடல் தாழை
மாலைமாறனார்: குறுந்தொகை: 245:3

39. தாழை (கைதை)

தாழையின் பூ வௌ்ளையாய் இருக்கும்

வௌ்வீத் தாழை
அம்மூவனார்: குறுந்தொகை: 163:4
(வீ- பூ)

தாழை வெண் பூ
மதுரை எழுத்தாளனார் சேந்தம் பூதனார்: குறுந்தொகை: 226:5

தாழையின் இலை முள்ளுடையது.
முள்ளிலைத்
தடவுநிலைத் தாழை
வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்: குறுந்தொகை: 219 :5-6

தாழைக்கு விழுதுகள் உண்டு; தாழையின் அரும்பு மடல் அவிழ்ந்து விரிந்து மலருவது, அன்னம் தன் சிறகைக் கோதுமிடத்து விரிகின்ற இறகுகள் போல இருக்கும்.

வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
 குருகு உளர் இறகின் விரிபு தோடுஅவிழும்  
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்: குறுந்தொகை: 228:1-2
(வீழ்-விழுது; ஊழுறு-மலர்கள் விரிகின்ற; குருகு-அன்னம்; உளர்தல்-அலகாலே சிறகினைக் கோதுதல்)

குளிர்ந்த நீர்நிலைகளில்/ கரையோரங்களில் , கைதை(தாழை) வளரும்.


கடைகரைத் தாழை
அம்மூவனார்: குறுந்தொகை: 303:2

கைதைஅம் தண்புனல்
கணக்காயர் தத்தனார்:  குறுந்தொகை: 304:7
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
அண்டர்மகன் குறுவழி : குறுந்தொகை : 345:5


40.தாளியறுகு
தாளிப்புல்லின் கொடி குளிர்ச்சியாய் இருக்கும்; இதனைப் பசுக்கள் உண்ணும்.

தாளித் தண்பவர் நாள்ஆமேயும்
காவன் முல்லைப்பூதனார்: குறுந்தொகை : 104:3  



No comments:

Post a Comment

Followers

Blog Archive