Friday, November 25, 2011

Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


91. முற்றிலுமாய் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுக,
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
0
Tags:  ,


Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011



81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0

Thursday, November 24, 2011

Vaazhviyal unmaikal aayiram 728-737 : inaiyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 728-737 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0





Wednesday, November 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 718-727: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 718-727: – இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


71. செல்வத்திற்கு அழிவு வந்தாலும் நல்லதல்லன சொல்லாத தெளிவு கொள்க,
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
0

Tuesday, November 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011


61. கல்லாதவரை விட்டு நீங்குக,
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)

0

Monday, November 21, 2011

vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


51. வருவாய் அளவறிந்து பிறருக்குக் கொடுப்பீர்,
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
0


Sunday, November 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011


41. தவவாழ்க்கை இனிது,
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
0

Saturday, November 19, 2011

Vaazhviyal unmaikal aayriam 668-677: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 668- 677: இனியவை நாற்பது 31-40


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011


31. குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டல் இனிது,
32. துன்பம் வந்து வருத்தம் அடையும் பொழுதும் மனத்தால் அஞ்சாதே,
33. பிறன் மனைவியை நோக்காப் பெருமை கொள்க,
34. பயிருக்கு மழை இனிது,
35. கற்றவர் முன் தாம் கற்றதைக் கூறுதல் இனிது,
36. பண்பில் சிறந்;தோருடன் சேருக,
37. எள்ளளவாயினும் அடுத்தவரிடம் இரவாமல் தான் கொடுக்க,
38. நண்பர்க்கு நல்லன செய்க,
39. நம்மோடு சேராதவரைச் சேர்த்துக் கொள்ளுக,
40. அறம்கூறும் முதியோர் வாழும் ஊர் இனிது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 21-30)
0


 

Friday, November 18, 2011

vaazhviyal unmaikal aayiram 658-667: iniyavai naarpathu 21-30: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 658– 667: இனியவை நாற்பது 21-30

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011



21. ஊர்தோறும் சென்று இரந்து வாழாதே,
22. நூல்களுக்குத் தவறான பொருள் கூறாத அறிவுநுட்பம் கொள்க,
23. பசியினால் உயிர் போவதாயினும் பண்பில்லார் கையில் உணவு பெறாதே,
24. குழந்தைகளை நோயற்று வாழச் செய்க,
25. கற்றரிந்த அவைக்கு அஞ்சாத கல்வி பெறுக,
26. சிறந்தோரைச் சேரும் செல்வம், அவரை விட்டு நீங்காதிருப்பின் இனிது,
27. மானம் போனபின் உயிர் வாழாமை இனிது,
28. தானம் அழியாமல் அடங்கி வாழ்க,
29. குறை இல்லாப் பொருள் வளம் கொள்க,
30. குழந்தைகளின் தளர்நடை காண்பது இனிது,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20)
0

know our scholars: H.G.Krishna pillai: அறிவோம் அறிஞர்களை - அறிஞர் கிருட்டிண பிள்ளை



அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011


10. காப்பியப் புலவர் கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. (1827-1900).

“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
0
 
or
 
 
 

Thursday, November 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 648-657: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 648-657 : இனியவை நாற்பது 11-20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



11. செங்கோலாட்சி புரிக,
12. பிறர்மீது குறை கூறாது வாழ்க,
13. இயன்ற வழியில் எல்லாம்; அறம் செய்க,
14. நன்னெறியாளாpன் பயன்சொல் கேட்க,
15. கல்வியில் சிறந்தவரைக் காப்பாய்க் கொள்க,
16. தந்தையே ஆனாலும் தீயவழியில் செல்வோர் வழி செல்லற்க,
17. நல்லோர் வாயிலான கேள்வியறிவைத் தெளிவாய்க் கேட்க,
18. குற்றமில்லாத செய்கையுடன் அனைவருக்கும் இரங்கி அன்புடையராய் இருப்பீர்,
19. கடன் பெற்று உண்டு வாழாமை இனிது,
20. மனத்தில் நற்குணம் இல்லாதவரை அஞ்சி நீங்கி விடுக,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 1-10)
0

Wednesday, November 16, 2011

Vaazhviyal unmaikal aayiram - Iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 638 -647 : இனியவை நாற்பது 1-10


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011


1. பிச்சை எடுத்தாவது கற்க,
2. கற்றவர் அவையில் கற்றதைச் சொல்க,
3. சான்றோருடன் சேருக,
4. இல்லற வாழ்க்கை இனிது
5. சொல்லியதை மறுக்காமல் செய்யும் பிள்ளைகள் உடைமை இனிது,
6. சென்றவிடமெல்லாம் நட்பு கொள்க,
7. ஊன் தின்று ஊனைப் பெருக்காதே,
8. மானமுடன் வாழ்க,
9. கொல்லாமை கொள்க,
10. நடுநிலை தவறிச் செயல்படுவோருக்குச் சிறப்பு செய்யாதே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 631-637)

0

Know our scholars- Puuvaalur Thiayarasar : பூவாளூர் தியாராசச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பூவாளூர் தியாராசச் செட்டியார் ~

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



8. புலமைக்கோர் இமயம் புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாராசச் செட்டியார் (1826-1888).

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.

 
 
 

Tuesday, November 15, 2011

know our sholars - Vallalaar Ramalinga adigal



அருளாளர் இராமலிங்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011



7. திருவருட் செல்வர் தெய்வத்தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கர் (1823-1874).

உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
0

Monday, November 14, 2011

vaazhviyal unmaikal aayiram 631-637: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 631-637


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011


631 நெருப்பில் தூங்கினாலும் வறுமையில் தூங்க இயலாது,
632 இருப்பதை மறைக்காதவரிடம் கேட்பதும் கொடையே,
633 மறைக்காதவரிடமும் கேளாமை கோடிபெறும்,
634 முயன்று பெறுவது கூழாயினும் இனிமையே,
635 அச்சத்தின் அடிப்படையிலேயே கீழ் மக்கள் ஒழுக்கம் அமையும்,
636 துன்பம் வரும் பொழுது தன்னையே விற்பவர் கயவர்,
637 சான்றோர் சொல்லிய அளவில்பயன்தருவர் கீழோர் வருத்தினால்தான் பயன்படுவர்
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 621-630)
0
 

Vaazhviyal unmaikal aayiram 621-630 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 621-630

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


621 இவ்வுலகம் இருப்பது பண்புடையாளர்களால்தான்.
622 சிரித்து மகிழாதவர்க்கு உலகம் பகலிலும் இருட்டாய் இருக்கும்.
623 பிறர்க்குக் கொடுக்கவும் தான் பயன்படுத்தவும் இல்லாத செல்வம் வீணே.
624 உதவாதவர் செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
625 பிறர் குற்றத்திற்காகவும் தம் குற்றத்திற்காகவும் நாணுபவரே உலகத்திற்கு உறைவிடம்.
626 பிறர் செய்ய வெட்கப்படும் செயல்களை வெட்கமின்றிச் செய்தால் அறம் வெட்கப்பட்டு விலகும்,
627 குடியை உயர்த்துவோனுக்குத் தெய்வமே முந்தி உதவும்,
628 உழுவார் உலகத்தார்க்கு ஆணி,
629 வறுமையைவிடத் துன்பம் தருவது வறுமையே,
630 வறுமைத் துன்பத்தால் பல துன்பங்கள் தொடரும்,


(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 611-620)
0

know our sholars! Arumuga naavalar : ஆறுமுக நாவலர் அறிவோம் அறிஞர்களை



ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»

Sunday, November 13, 2011

Vazhviyal unmaikal aayiram 611-620 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 611-620


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/11/2011


611 நற்குடிப் பிறந்தார் கோடி பொருள் தந்தாலும் இழிந்தன செய்யார்.
612 பெருமையில் வேண்டும் பணிவு.
613 தவறு சிறிதாயினும் உயர்ந்தோரும்; தாழ்வர்.
614 புகழே செல்வம்.
615 பிறப்பில் எல்லா உயிரும் இணையே.
616 மேலோர், கீழோர் என்பது பிறப்பினால் அல்ல; அவரவர் பண்பினாலேதான்.
617 பணிதல் பெருமைக்கு உரியது; தன்னை வியத்தல் சிறுமைக்குரியது.
618 நல்லன செய்வதே நம் கடமை.
619 நம்மைவிடத் தாழ்ந்தவரிடமும் தோல்வியை ஏற்பதே சால்பு.
620 தீங்கு இழைத்தவர்க்கும் நன்மை செய்வதே சால்பு.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 601-610)
0

Know our Scholars - G.U.Pope : அறிஞர். சி.யு.போப் அறிவோம் அறிஞர்களை!

November 13, 2011


அறிஞர். சி.யு.போப் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


5. சீரியதமிழ்க் காதலர் செந்தமிழ்ச் செம்மல் 
முனைவர். சி.யு.போப் (1820-1908).

அற நூல்களான திருக்குறளை நாலடியாரை, சமய நூலான திருவாசகத்தை ஐரோப்பியர் கற்றுணர வேண்டுமென்னும் தாகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தருளிய பேரறிவாளர்.


 

Friday, November 11, 2011

know our scholars 3- Robert Caldwell : அறிவோம் அறிஞர்களை 3 - முனைவர் இராபர்ட் கால்டுவெல்


முனைவர் இராபர்ட் கால்டுவெல் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


3. ஆற்றல்மிகு மொழிவல்லார் அயர்லாந்துத் தமிழறிஞர் முனைவர் இராபர்ட் கால்டுவெல் (1814-1891). 

பெயர்களை ‘உயர்திணை’ என்றும், ‘அஃறிணை’ என்றும் தமிழ் இலக்கண நூலோர் வகுத்த முறை. உலகத்தில் வேறெந்த மொழியிலும் இல்லாத பகுப்பு. இது தமிழின் தனிச் சிறப்பு என்றார் இப்பேரறிஞர்.

Vaazhviyal unmaikal aayiram 601-610 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 601-610

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


601 பகையை முளைக்கும் பொழுதே அகற்றுக.
602 உறவுபோல் நடிக்கும் பகைவரிடம் விழிப்பாக இருக்கவும்.
603 உட்பகை எள் அளவு இருப்பினும் கேடே தரும்.
604 பொpயாரைப் பேணாதவர் பெருந்துன்பம் அடைவார்.
605 விலைமகள், கள், சூது ஆகியன செல்வம் வேண்டார் தொடர்புக்குரியன.
606 கள்ளுண்பது நஞ்சுண்பதற்கு ஒப்பாகும்.
607 வெற்றி கிடைத்தாலும் சூதினை விரும்பாதே.
608 சிறுமையும் வறுமையும் தருவது சூது.
609 செரித்த பின் உண்டால் மருந்து வேண்டா.
610 நோய், நோய்க் காரணம், தணிப்பு முறையறிந்து ஏற்றதைச் செய்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 591-600)

Thursday, November 10, 2011

Know our Scholars 2 : Vethanayakam ( Sasthriyar) : கவிஞர் வேதநாயக சாசுதிரியார் ~ அறிவோம் அறிஞர்களை! 2.

கவிஞர் வேதநாயக சாசுதிரியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011



2. வித்தகக் கவிஞர் விவிலியக் கவிஞர் வேதநாயக சாசுதிரியார் (1774-1864).
கிறித்தவ வேதாகமங்களின் பிழிவை. மிக எளிமையாகவும் இனிமையாகவும் ஆயிரக்கணக்கான பாடல்களாக மலர்வித்த இப்பெருந்தகையைச் ‘சாசுதிரியார்’ எனக் கிறித்தவ உலகம் போற்றியது.

Vaazhviyal unmaikal aayiram 591-600 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 591-600

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011


591 கேட்டினைக் கொண்டு நல்லதை விடுவதே பேதைமை ஆகும்.
592 படித்தும் பிறர் சொல்லியும் உணராப் பேதையைப் போல வேறு பேதையர் இல்லை.
593 பிரிந்தால் துன்பம் தராததால் பேதையர் நட்பு இனியதே.
594 இல்லாமையுள் மிக்க இல்லாமை அறிவு இல்லாமையே.
595 தன்னாலும் தொpயாமல் சொன்னாலும் புரியாமல் வாழாதே.
596 மாறுபாட்டால் துன்பம் வரும்; உடன்பாட்டால் மகிழ்ச்சி வரும்.
597 உடனிருந்து தீங்கு செய்பவனைப் பகை யாக்குக.
598 வினையாட்டாகக் கூடப் பகையை விரும்பாதே.
599 வில்லேருழவர் பகை கொண்டாலும் சொல்லேருழவர் பகை கொள்ளாதே.
600 பகையை நட்பாக ஆக்கும் பண்பாளனிடம் உலகம் அடங்கும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 581-590)


Wednesday, November 9, 2011

Vaazhviyal unmaikal aayiram 581-590 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 581 – 590

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 09/11/2011


581 வேண்டியோர் வருந்துமாறு செய்யக் காரணம் அறியாமை மட்டுமன்று உரிமையும் ஆகும்.
582 நட்பு உரிமையால் கேளாமல் செய்வதை ஏற்பதே சிறந்த நட்பு.
583 இனிமையாய் இருப்பினும் பண்பில்லார் நட்பு குறைவதே நன்று.
584 பயன்நோக்கிப் பழகும் நண்பர் கள்வருக்கு இணையானவர்.
585 செய்யக் கூடியதையும் செய்யாமல் கெடுக்கும் நட்பைக் கைவிடுக.
586 சொல் வேறு செயல்வேறு உடையவர் நட்பு கனவிலும் துன்பமே.
587 முகத்தில் இனிமையும் அகத்தில் வஞ்சகமும் கொண்டோர் நட்பைக் கைவிடுக.
588 மனத்தால் இணையாதவரை நம்பாதே.
589 கயவர் தொழும் கையிலும் ஆயுதம் இருக்கும்;அவர் அழுகை
யிலும் வஞ்சகம் இருக்கும்.
590 வெளியே புகழ்ந்து உள்ளத்தில் இகழ்வோரை உள்ளத்தில் வைக்காதே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 571-580)


Tuesday, November 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 571-580 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 571-580

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 08/11/2011


571    இடையூறின்றி நிலைப்பதே நட்பு.
572    ஆராயாமல் நட்பு கொள்ளாதே; நட்பு கொண்டபின் விடாதே.
573    ஆராய்ந்து கொள்ளாத நட்பு சாவதற்கான துன்பத்தைத் தரும்.
574    பழிக்கு அஞ்சுபவனை நட்பாகக் கொள்க.
575    அறிவுறுத்தித் திருத்துவோரின் நட்பைக் கொள்க.
576    துன்பம் நட்பை அளப்பதற்குரிய அளவுகோல்.
577    ஊக்கம் இழக்கும் செயல்களைச் செய்யாதே.
578    துன்பத்;தில் கைவிடுவோரை நட்பாகக் கொள்ளாதே.
579    தீயோர் நட்பை விலக்குக.
580     மாசற்றார்; நட்பை நாடுக.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 561-570)



Know our scholars! :அறிவோம் அறிஞர்களை!

அறிவோம் அறிஞர்களை!


பதிவு செய்த நாள் : 08/11/2011


1. பாட்டறப் புலவர்
பைந்தமிழ்ப் புலவர்
பாடுவார் முத்தப்பர் (176 7-1829)


1.எண்ணங்களைப் பாடலாக்கிய அடுத்த விநாடியே. அவை எதிரே நடந்துவிடும் அற்புதத்தைக் கண்களில் காணவைத்த நிறைமொழிப் புலவர் அறம் பாடிய அருட்புலவர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



Saturday, November 5, 2011

Vaazhviyal unmaikal aayiram 561-570 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 561-570

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


561     தலைவரின் கண்ணில் நீர் வருமாறு வரும் இறப்பு பெருமை உடையது.
562        நட்பே சிறந்த காப்பு
563    வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564    தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565    படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது  பண்புடையாளர் தொடர்பு.
566    நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567    நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568    முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569    அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570    உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால்  விரைந்து நீக்குவதே நட்பு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)


Friday, November 4, 2011

Vaazhviyal unmaikal aayiram 551-560: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 551 - 560

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011



551    பொருள் ஆகிய விளக்கு எண்ணிய நாட்டில் பகை இருள் போக்கும்.
552    தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553    அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554    அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555    செல்வம் சேர்க்க.
556    நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557    பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558    எமனே  வந்தாலும் எதிர்ப்பதே படை.
559    முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560     பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
 

Thursday, November 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 541-550 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்541 - 550

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


541    அவைக்கு அஞ்சிச் சொல்லத் தொpயாதவர் இருந்தும் இல்லாதவராவார்.
542    நல்விளையுள், தக்கார், தாழ்விலாச் செல்வர் சேர்ந்ததே நாடு.
543    மிகுந்த பசி, நீங்கா நோய், அழிக்கும் பகை அற்றதே நாடு.
544    கேடு அறியாத, கேடு வந்தாலும் வளம் குன்றாத நாடே சிறந்த நாடு.
545    நோய் இன்மை, செல்வம், (அறிவு, பொருள்) ஆக்கம், இன்பம், பாதுகாப்பு உடையதே நாடு.
546    தன்னிறைவான நாடே நாடு.
547    எல்லா வளம் இருப்பினும் நல்லாட்சி இல்லையேல் ஒன்றும் இல்லை.
548    வினைச் சிறப்பு இல்லையேல் பாதுகாப்பால் பயன் இல்லை.
549    பொருள் இல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருளைப் போல் வேறு பொருள் இல்லை.
550    இல்லாரை எள்ளுவர்; செல்வரைச் சிறப்பிப்பர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 531-540)


Wednesday, November 2, 2011

Vaazhviyal unmaikal aayiram 531-540 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 531-540

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011



531    அறிந்தவரிடம் அறிந்தவராய் நடந்து கொள்க.
532    அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533    உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534    நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535    கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536    போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537    கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538    அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539    சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540    நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
 
 

Tuesday, November 1, 2011

Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


521    செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.
522    பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.
523    செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.
524    செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.
525    யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.
526    வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.
527    தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துணைக்கொள்.
528    கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.
529    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.
530    பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)



Followers

Blog Archive