Sunday, December 18, 2011

Know our scholars 28: அறிவோம் அறிஞர்களை!- 28. அறிஞர் அ.நாராயணசாமி


அறிஞர் அ.நாராயணசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/12/2011



28. பெரும்புலவர் தலைமணி பின்னத்தூர் கலைமணி
அறிஞர் அ.நாராயணசாமி ஐயர் (1862-1914).


28. தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க, அதில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்களுக்கெல்லாம் ஓர் அகராதியை உருவாக்கிய இப்பெரும்புலவர் எழுதிய நூல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, November 25, 2011

Vazhviyal unmaikal aayiram 748-757 iniyavai naarpathu : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 748-757: இனியவை நாற்பது

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


91. முற்றிலுமாய் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுக,
92. ஆள்வோர், ஒருவரிடம் மட்டும் பற்று வைக்காமல் பல்லுயிர்கள் மீதும் அன்பு வைக்க,
93. பொறாமை கொண்டு பேசாதே,
94. சினம் நீக்கிச் செப்பமுடையவராய் வாழ்க,
95. கண்ட பொருளை யெல்லாம் விரும்பிக் கவர்ந்து கொள்ளாமல் மறந்து விடுக,
96. இளமையும் மூப்பின் பகுதி என உணர்க,
97. விலை மகளிரை நஞ்சென எண்ணுக,
98. பிச்சை கேட்பவன் கோபம் கொள்ளாதே,
99. குடிசையில் இருந்தாலும் துன்பம் கொள்ளாதே,
100. பேராசை கொண்டு அறவழி நீங்கும் மனத்தளர்ச்சி கொள்ளாதே,
101. பழுது இல்லா நல்ல நூற்களைக் கற்று வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 81-90)
0
Tags:  ,


Vaazhviyal unmaikal aayiram 738-747: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 738-747: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – 

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011



81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0

Thursday, November 24, 2011

Vaazhviyal unmaikal aayiram 728-737 : inaiyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 728-737 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


81. கற்றறிந்தார் கூறும் பொருள் கேட்க,
82. அன்பில்லா ஆட்சியாளாpன் கீழ் வாழ்தல் துன்பம்,
83. ஆராயாது தீங்கிழைத்தார்க்குத் தீங்கு செய்யாதே,
84. ஊரார் வெறுக்காதவற்றைச் செய்க,
85. சோம்பித் திரியாமல் முயற்சி மேற்கொள்க,
86. போரை விலக்குக,
87. இரவில் திரியாதே,
88. சோர்வின்றிச் சொல்லுக,
89. வலிய வரினும் ஒருபொருட்டாய் மதிக்கத் தகாதவரின் நட்பை ஏற்காதே,
90. ஒற்றின் மூலம் ஒற்றர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 71-80)
0





Wednesday, November 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 718-727: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 718-727: – இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


71. செல்வத்திற்கு அழிவு வந்தாலும் நல்லதல்லன சொல்லாத தெளிவு கொள்க,
72. கயவரிடம் விலகி வாழ்க,
73. உயர்வு எண்ணி ஊக்கம் கொள்க,
74. யாரையும் எளியவர் என்று இகழ்ந்து பேசாமல் புகழ்பட வாழ்க,
75. பிறர் செய்த நன்றியின் பயனை நினைத்து வாழ்க,
76. நடுவர் மன்றத்தில் ஒருதலைச் சார்பாக உரைக்காதே,
77. யாருமறியாமல் அடைக்கலமாய் வந்த பொருளாயினும் கவர்ந்து கொள்ளாதே,
78. அடைக்கலமாய் வந்தவர் மேலும் துன்புறாமல் செய்க,
79. கடன் பெற்றாவது செய்ய வேண்டியவற்றைச் செய்க,
80. சிறப்பான கேள்வியறிவு இருப்பினும் ஆராய்ந்து சொல்லுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 61-70)
0

Tuesday, November 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 708-717 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 708-717: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/11/2011


61. கல்லாதவரை விட்டு நீங்குக,
62. நிலையற்ற அறிவுடைய நிறைவற்ற மனிதரை விட்டு நீங்குக,
63. ஒருபொருளை வேண்டி வந்தவரின் விருப்பத்தை அழிக்காதே,
64. மதிக்கா இடத்தில் வாழாத மன எழுச்சி கொள்க,
65. உள்ளவற்றை மறைக்காமல் கொடுக்கும் அன்பு கொள்க,
66. தானம் கொடுக்கும் தகையாண்மை கொள்க,
67. தன்மானத்திற்கு இழுக்கு நேராமல் வாழ்க,
68. குற்றத்தைப் பொpது படுத்தாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்க,
69. செய்ய முடியாதவனைச் செய்யுமாறு வற்புறுத்தாதே,
70. நிலையற்றது வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்க,

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 51-60)

0

Monday, November 21, 2011

vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


51. வருவாய் அளவறிந்து பிறருக்குக் கொடுப்பீர்,
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
0


Sunday, November 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 678-697: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 678-697: இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011


41. தவவாழ்க்கை இனிது,
42. பெற்றோரைக் காலையில் வணங்கி எழுக,
43. நண்பரைப் பற்றிப் புறஞ்சொல் கூறாது வாழ்க,
44. பணிவான வாழ்க்கை இனிது,
45. குறைவில்லாத செல்வம் பெற்றுத் தக்கவர்க்குக் கொடுப்பீர்,
46. வஞ்சகருடன் சேராமல் விலகுக,
47. புலவர்களின் சொற்களைப் போற்றுக,
48. பிறர் பொருளைப் பறிக்;காமல் வாழ்க,
49. அறம் புரிந்து அல்லவை நீக்குக,
50. மறந்தும், சிறப்பில்லா அறிவிலிகளை அறிந்து சேராமல் வாழ்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 31-40)
0

Saturday, November 19, 2011

Vaazhviyal unmaikal aayriam 668-677: iniyavai naatpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 668- 677: இனியவை நாற்பது 31-40


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011


31. குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டல் இனிது,
32. துன்பம் வந்து வருத்தம் அடையும் பொழுதும் மனத்தால் அஞ்சாதே,
33. பிறன் மனைவியை நோக்காப் பெருமை கொள்க,
34. பயிருக்கு மழை இனிது,
35. கற்றவர் முன் தாம் கற்றதைக் கூறுதல் இனிது,
36. பண்பில் சிறந்;தோருடன் சேருக,
37. எள்ளளவாயினும் அடுத்தவரிடம் இரவாமல் தான் கொடுக்க,
38. நண்பர்க்கு நல்லன செய்க,
39. நம்மோடு சேராதவரைச் சேர்த்துக் கொள்ளுக,
40. அறம்கூறும் முதியோர் வாழும் ஊர் இனிது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 21-30)
0


 

Friday, November 18, 2011

vaazhviyal unmaikal aayiram 658-667: iniyavai naarpathu 21-30: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 658– 667: இனியவை நாற்பது 21-30

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

 இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011



21. ஊர்தோறும் சென்று இரந்து வாழாதே,
22. நூல்களுக்குத் தவறான பொருள் கூறாத அறிவுநுட்பம் கொள்க,
23. பசியினால் உயிர் போவதாயினும் பண்பில்லார் கையில் உணவு பெறாதே,
24. குழந்தைகளை நோயற்று வாழச் செய்க,
25. கற்றரிந்த அவைக்கு அஞ்சாத கல்வி பெறுக,
26. சிறந்தோரைச் சேரும் செல்வம், அவரை விட்டு நீங்காதிருப்பின் இனிது,
27. மானம் போனபின் உயிர் வாழாமை இனிது,
28. தானம் அழியாமல் அடங்கி வாழ்க,
29. குறை இல்லாப் பொருள் வளம் கொள்க,
30. குழந்தைகளின் தளர்நடை காண்பது இனிது,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20)
0

know our scholars: H.G.Krishna pillai: அறிவோம் அறிஞர்களை - அறிஞர் கிருட்டிண பிள்ளை



அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011


10. காப்பியப் புலவர் கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. (1827-1900).

“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
0
 
or
 
 
 

Thursday, November 17, 2011

Vaazhviyal unmaikal aayiram 648-657: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 648-657 : இனியவை நாற்பது 11-20

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 11-20

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



11. செங்கோலாட்சி புரிக,
12. பிறர்மீது குறை கூறாது வாழ்க,
13. இயன்ற வழியில் எல்லாம்; அறம் செய்க,
14. நன்னெறியாளாpன் பயன்சொல் கேட்க,
15. கல்வியில் சிறந்தவரைக் காப்பாய்க் கொள்க,
16. தந்தையே ஆனாலும் தீயவழியில் செல்வோர் வழி செல்லற்க,
17. நல்லோர் வாயிலான கேள்வியறிவைத் தெளிவாய்க் கேட்க,
18. குற்றமில்லாத செய்கையுடன் அனைவருக்கும் இரங்கி அன்புடையராய் இருப்பீர்,
19. கடன் பெற்று உண்டு வாழாமை இனிது,
20. மனத்தில் நற்குணம் இல்லாதவரை அஞ்சி நீங்கி விடுக,
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 1-10)
0

Wednesday, November 16, 2011

Vaazhviyal unmaikal aayiram - Iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 638 -647 : இனியவை நாற்பது 1-10


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011


1. பிச்சை எடுத்தாவது கற்க,
2. கற்றவர் அவையில் கற்றதைச் சொல்க,
3. சான்றோருடன் சேருக,
4. இல்லற வாழ்க்கை இனிது
5. சொல்லியதை மறுக்காமல் செய்யும் பிள்ளைகள் உடைமை இனிது,
6. சென்றவிடமெல்லாம் நட்பு கொள்க,
7. ஊன் தின்று ஊனைப் பெருக்காதே,
8. மானமுடன் வாழ்க,
9. கொல்லாமை கொள்க,
10. நடுநிலை தவறிச் செயல்படுவோருக்குச் சிறப்பு செய்யாதே.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 631-637)

0

Know our scholars- Puuvaalur Thiayarasar : பூவாளூர் தியாராசச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பூவாளூர் தியாராசச் செட்டியார் ~

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



8. புலமைக்கோர் இமயம் புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாராசச் செட்டியார் (1826-1888).

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.

 
 
 

Tuesday, November 15, 2011

know our sholars - Vallalaar Ramalinga adigal



அருளாளர் இராமலிங்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011



7. திருவருட் செல்வர் தெய்வத்தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கர் (1823-1874).

உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
0

Monday, November 14, 2011

vaazhviyal unmaikal aayiram 631-637: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 631-637


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011


631 நெருப்பில் தூங்கினாலும் வறுமையில் தூங்க இயலாது,
632 இருப்பதை மறைக்காதவரிடம் கேட்பதும் கொடையே,
633 மறைக்காதவரிடமும் கேளாமை கோடிபெறும்,
634 முயன்று பெறுவது கூழாயினும் இனிமையே,
635 அச்சத்தின் அடிப்படையிலேயே கீழ் மக்கள் ஒழுக்கம் அமையும்,
636 துன்பம் வரும் பொழுது தன்னையே விற்பவர் கயவர்,
637 சான்றோர் சொல்லிய அளவில்பயன்தருவர் கீழோர் வருத்தினால்தான் பயன்படுவர்
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 621-630)
0
 

Vaazhviyal unmaikal aayiram 621-630 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 621-630

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


621 இவ்வுலகம் இருப்பது பண்புடையாளர்களால்தான்.
622 சிரித்து மகிழாதவர்க்கு உலகம் பகலிலும் இருட்டாய் இருக்கும்.
623 பிறர்க்குக் கொடுக்கவும் தான் பயன்படுத்தவும் இல்லாத செல்வம் வீணே.
624 உதவாதவர் செல்வம் ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற் போன்றது.
625 பிறர் குற்றத்திற்காகவும் தம் குற்றத்திற்காகவும் நாணுபவரே உலகத்திற்கு உறைவிடம்.
626 பிறர் செய்ய வெட்கப்படும் செயல்களை வெட்கமின்றிச் செய்தால் அறம் வெட்கப்பட்டு விலகும்,
627 குடியை உயர்த்துவோனுக்குத் தெய்வமே முந்தி உதவும்,
628 உழுவார் உலகத்தார்க்கு ஆணி,
629 வறுமையைவிடத் துன்பம் தருவது வறுமையே,
630 வறுமைத் துன்பத்தால் பல துன்பங்கள் தொடரும்,


(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 611-620)
0

know our sholars! Arumuga naavalar : ஆறுமுக நாவலர் அறிவோம் அறிஞர்களை



ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»

Sunday, November 13, 2011

Vazhviyal unmaikal aayiram 611-620 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 611-620


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/11/2011


611 நற்குடிப் பிறந்தார் கோடி பொருள் தந்தாலும் இழிந்தன செய்யார்.
612 பெருமையில் வேண்டும் பணிவு.
613 தவறு சிறிதாயினும் உயர்ந்தோரும்; தாழ்வர்.
614 புகழே செல்வம்.
615 பிறப்பில் எல்லா உயிரும் இணையே.
616 மேலோர், கீழோர் என்பது பிறப்பினால் அல்ல; அவரவர் பண்பினாலேதான்.
617 பணிதல் பெருமைக்கு உரியது; தன்னை வியத்தல் சிறுமைக்குரியது.
618 நல்லன செய்வதே நம் கடமை.
619 நம்மைவிடத் தாழ்ந்தவரிடமும் தோல்வியை ஏற்பதே சால்பு.
620 தீங்கு இழைத்தவர்க்கும் நன்மை செய்வதே சால்பு.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 601-610)
0

Know our Scholars - G.U.Pope : அறிஞர். சி.யு.போப் அறிவோம் அறிஞர்களை!

November 13, 2011


அறிஞர். சி.யு.போப் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


5. சீரியதமிழ்க் காதலர் செந்தமிழ்ச் செம்மல் 
முனைவர். சி.யு.போப் (1820-1908).

அற நூல்களான திருக்குறளை நாலடியாரை, சமய நூலான திருவாசகத்தை ஐரோப்பியர் கற்றுணர வேண்டுமென்னும் தாகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தருளிய பேரறிவாளர்.


 

Friday, November 11, 2011

know our scholars 3- Robert Caldwell : அறிவோம் அறிஞர்களை 3 - முனைவர் இராபர்ட் கால்டுவெல்


முனைவர் இராபர்ட் கால்டுவெல் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


3. ஆற்றல்மிகு மொழிவல்லார் அயர்லாந்துத் தமிழறிஞர் முனைவர் இராபர்ட் கால்டுவெல் (1814-1891). 

பெயர்களை ‘உயர்திணை’ என்றும், ‘அஃறிணை’ என்றும் தமிழ் இலக்கண நூலோர் வகுத்த முறை. உலகத்தில் வேறெந்த மொழியிலும் இல்லாத பகுப்பு. இது தமிழின் தனிச் சிறப்பு என்றார் இப்பேரறிஞர்.

Vaazhviyal unmaikal aayiram 601-610 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 601-610

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


601 பகையை முளைக்கும் பொழுதே அகற்றுக.
602 உறவுபோல் நடிக்கும் பகைவரிடம் விழிப்பாக இருக்கவும்.
603 உட்பகை எள் அளவு இருப்பினும் கேடே தரும்.
604 பொpயாரைப் பேணாதவர் பெருந்துன்பம் அடைவார்.
605 விலைமகள், கள், சூது ஆகியன செல்வம் வேண்டார் தொடர்புக்குரியன.
606 கள்ளுண்பது நஞ்சுண்பதற்கு ஒப்பாகும்.
607 வெற்றி கிடைத்தாலும் சூதினை விரும்பாதே.
608 சிறுமையும் வறுமையும் தருவது சூது.
609 செரித்த பின் உண்டால் மருந்து வேண்டா.
610 நோய், நோய்க் காரணம், தணிப்பு முறையறிந்து ஏற்றதைச் செய்க.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 591-600)

Thursday, November 10, 2011

Know our Scholars 2 : Vethanayakam ( Sasthriyar) : கவிஞர் வேதநாயக சாசுதிரியார் ~ அறிவோம் அறிஞர்களை! 2.

கவிஞர் வேதநாயக சாசுதிரியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011



2. வித்தகக் கவிஞர் விவிலியக் கவிஞர் வேதநாயக சாசுதிரியார் (1774-1864).
கிறித்தவ வேதாகமங்களின் பிழிவை. மிக எளிமையாகவும் இனிமையாகவும் ஆயிரக்கணக்கான பாடல்களாக மலர்வித்த இப்பெருந்தகையைச் ‘சாசுதிரியார்’ எனக் கிறித்தவ உலகம் போற்றியது.

Vaazhviyal unmaikal aayiram 591-600 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 591-600

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011


591 கேட்டினைக் கொண்டு நல்லதை விடுவதே பேதைமை ஆகும்.
592 படித்தும் பிறர் சொல்லியும் உணராப் பேதையைப் போல வேறு பேதையர் இல்லை.
593 பிரிந்தால் துன்பம் தராததால் பேதையர் நட்பு இனியதே.
594 இல்லாமையுள் மிக்க இல்லாமை அறிவு இல்லாமையே.
595 தன்னாலும் தொpயாமல் சொன்னாலும் புரியாமல் வாழாதே.
596 மாறுபாட்டால் துன்பம் வரும்; உடன்பாட்டால் மகிழ்ச்சி வரும்.
597 உடனிருந்து தீங்கு செய்பவனைப் பகை யாக்குக.
598 வினையாட்டாகக் கூடப் பகையை விரும்பாதே.
599 வில்லேருழவர் பகை கொண்டாலும் சொல்லேருழவர் பகை கொள்ளாதே.
600 பகையை நட்பாக ஆக்கும் பண்பாளனிடம் உலகம் அடங்கும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 581-590)


Wednesday, November 9, 2011

Vaazhviyal unmaikal aayiram 581-590 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 581 – 590

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 09/11/2011


581 வேண்டியோர் வருந்துமாறு செய்யக் காரணம் அறியாமை மட்டுமன்று உரிமையும் ஆகும்.
582 நட்பு உரிமையால் கேளாமல் செய்வதை ஏற்பதே சிறந்த நட்பு.
583 இனிமையாய் இருப்பினும் பண்பில்லார் நட்பு குறைவதே நன்று.
584 பயன்நோக்கிப் பழகும் நண்பர் கள்வருக்கு இணையானவர்.
585 செய்யக் கூடியதையும் செய்யாமல் கெடுக்கும் நட்பைக் கைவிடுக.
586 சொல் வேறு செயல்வேறு உடையவர் நட்பு கனவிலும் துன்பமே.
587 முகத்தில் இனிமையும் அகத்தில் வஞ்சகமும் கொண்டோர் நட்பைக் கைவிடுக.
588 மனத்தால் இணையாதவரை நம்பாதே.
589 கயவர் தொழும் கையிலும் ஆயுதம் இருக்கும்;அவர் அழுகை
யிலும் வஞ்சகம் இருக்கும்.
590 வெளியே புகழ்ந்து உள்ளத்தில் இகழ்வோரை உள்ளத்தில் வைக்காதே.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 571-580)


Tuesday, November 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 571-580 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 571-580

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 08/11/2011


571    இடையூறின்றி நிலைப்பதே நட்பு.
572    ஆராயாமல் நட்பு கொள்ளாதே; நட்பு கொண்டபின் விடாதே.
573    ஆராய்ந்து கொள்ளாத நட்பு சாவதற்கான துன்பத்தைத் தரும்.
574    பழிக்கு அஞ்சுபவனை நட்பாகக் கொள்க.
575    அறிவுறுத்தித் திருத்துவோரின் நட்பைக் கொள்க.
576    துன்பம் நட்பை அளப்பதற்குரிய அளவுகோல்.
577    ஊக்கம் இழக்கும் செயல்களைச் செய்யாதே.
578    துன்பத்;தில் கைவிடுவோரை நட்பாகக் கொள்ளாதே.
579    தீயோர் நட்பை விலக்குக.
580     மாசற்றார்; நட்பை நாடுக.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 561-570)



Know our scholars! :அறிவோம் அறிஞர்களை!

அறிவோம் அறிஞர்களை!


பதிவு செய்த நாள் : 08/11/2011


1. பாட்டறப் புலவர்
பைந்தமிழ்ப் புலவர்
பாடுவார் முத்தப்பர் (176 7-1829)


1.எண்ணங்களைப் பாடலாக்கிய அடுத்த விநாடியே. அவை எதிரே நடந்துவிடும் அற்புதத்தைக் கண்களில் காணவைத்த நிறைமொழிப் புலவர் அறம் பாடிய அருட்புலவர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



Saturday, November 5, 2011

Vaazhviyal unmaikal aayiram 561-570 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 561-570

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


561     தலைவரின் கண்ணில் நீர் வருமாறு வரும் இறப்பு பெருமை உடையது.
562        நட்பே சிறந்த காப்பு
563    வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564    தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565    படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது  பண்புடையாளர் தொடர்பு.
566    நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567    நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568    முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569    அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570    உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால்  விரைந்து நீக்குவதே நட்பு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)


Friday, November 4, 2011

Vaazhviyal unmaikal aayiram 551-560: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 551 - 560

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011



551    பொருள் ஆகிய விளக்கு எண்ணிய நாட்டில் பகை இருள் போக்கும்.
552    தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553    அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554    அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555    செல்வம் சேர்க்க.
556    நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557    பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558    எமனே  வந்தாலும் எதிர்ப்பதே படை.
559    முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560     பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
 

Thursday, November 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 541-550 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்541 - 550

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/11/2011


541    அவைக்கு அஞ்சிச் சொல்லத் தொpயாதவர் இருந்தும் இல்லாதவராவார்.
542    நல்விளையுள், தக்கார், தாழ்விலாச் செல்வர் சேர்ந்ததே நாடு.
543    மிகுந்த பசி, நீங்கா நோய், அழிக்கும் பகை அற்றதே நாடு.
544    கேடு அறியாத, கேடு வந்தாலும் வளம் குன்றாத நாடே சிறந்த நாடு.
545    நோய் இன்மை, செல்வம், (அறிவு, பொருள்) ஆக்கம், இன்பம், பாதுகாப்பு உடையதே நாடு.
546    தன்னிறைவான நாடே நாடு.
547    எல்லா வளம் இருப்பினும் நல்லாட்சி இல்லையேல் ஒன்றும் இல்லை.
548    வினைச் சிறப்பு இல்லையேல் பாதுகாப்பால் பயன் இல்லை.
549    பொருள் இல்லாதவரையும் பொருளாகச் செய்யும் பொருளைப் போல் வேறு பொருள் இல்லை.
550    இல்லாரை எள்ளுவர்; செல்வரைச் சிறப்பிப்பர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 531-540)


Wednesday, November 2, 2011

Vaazhviyal unmaikal aayiram 531-540 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 531-540

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011



531    அறிந்தவரிடம் அறிந்தவராய் நடந்து கொள்க.
532    அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533    உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534    நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535    கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536    போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537    கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538    அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539    சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540    நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
 
 

Tuesday, November 1, 2011

Vaazhviyal unmaikal aayiram 521-530 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 521-530

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 01/11/2011


521    செயலும் பகையும் குறையாய் முடிப்பது பாதி அணைத்த தீ போல்அழிவு தரும்.
522    பொருள், கருவி, காலம், செயல், இடம் முதலியவற்றை ஆராய்ந்து செய்க.
523    செயலின் முடிவு, வரும் இடையூறு, கிடைக்கும் பயன் பார்த்துச் செய்க.
524    செய்யும் முறை அறிந்தும் பட்டறிவு உள்ளவரின் துணை கொண்டும் செயல் முடிக்க.
525    யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயல் மூலம் மற்றெhரு செயலை முடிக்கவும்.
526    வேண்டியவர்க்கு வேண்டியன செய்யும் முன் வேண்டாதவரை வேண்டியவராக்கு.
527    தாழ்வினைத் தடுக்க உயர்ந்n;தாரைத் துணைக்கொள்.
528    கடமை, காலம், இடம் உணர்ந்து சொல்பவனே தூதன்.
529    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதலே சொல்வன்மை.
530    பேசும் அவையறியாதவர் சொல்லும் வகையறியாதவர்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 511-520)



Saturday, October 29, 2011

vaazhviyal unmaikal aayiram 511-520: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 511-520


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/10/2011


511 சொல்லுதல் எளிது; சொல்லியதைச் செய்தல் அரிது.
512 சிறந்தோர் செயல் உயர்ந்தோராலும் போற்றப்படும்.
513 திண்ணிய எண்ணம் எண்ணியதைத் தரும்.
514 உருவத்தைப் பார்த்து இகழாதே,அச்சாணி இல்லையேல் தேரோட்டம் இல்லை.
515 கலங்காமல் தயங்காமல் கருமம் செய்க.
516 இறுதியில் இன்பம் தருவனவற்றைத் துன்பம் வந்தாலும் செய்க.
517 வினைத்திட்பம் உடையோரையே உலகம் விரும்பும்.
518 துணிவுடன் செயல்படு; துணிந்தபின் தயங்காதே.
519 செயலுக்கேற்றவாறு காலந்தாழ்ந்தோ விரைந்தோ செய்க.
520 முடியக் கூடிய வழியில் எல்லாம் செயல் ஆற்றுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 501- 510)

Friday, October 28, 2011

vaazhviyal unmaikal aayiram 501-510 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 501-510

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/10/2011



501 தவறென உணர்ந்தால் மீண்டும் செய்யாதே.
502 தாயின் பசியைப் போக்குவதற்குக் கூடப்; பழிப்பன செய்யாதே.
503 பழிச்செயல் தரும் செல்வத்தைவிடச் சான்றோர் வறுமையே சிறந்தது.
504 கடிந்தன செய்தால் முடிந்தாலும் துன்பம் தரும்.
505 பிறர் அழக் கொண்ட பொருள் நாம்; அழப் போகும்.
506 அறவழி வந்தன இழந்தாலும் மீண்டும் கிடைக்கும்.
507 குறுக்கு வழியில் வரும் பொருள் பச்சை மண்பாத்திரத்தில் வைக்கும் நீர்.
508 மன உறுதியே வினை உறுதி.
509 தீயன செய்யாமையும் துன்பம் வந்;தால் தளராமையுமே சிறந்த வழி.
510 வினை முடிக்கும் முன் விளம்பரம் தேடினால் துன்பமே வரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 491 – 500)


Thursday, October 27, 2011

Vaazhviyal unmaikal aayiram 491- 500 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 491-500

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011



491 வெல்லும் சொல் பிறிதின்றிச் சிறந்ததைச் சொல்க.
492 விரும்புமாறு கூறுக; கேட்பவற்றுள் பயனுள்ளவற்றை அறிக.
493 சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையவரை வெல்லுவார் யாருமில்லை.
494 இனிதாய் முறைப்படக் கூறுவோனிடம் உலகம் அடைக்கலம்.
495 சுருக்கமாய்ச் சொல்லத் தொpயாதவர் விரிவாய்ப் பேச விரும்புவர்.
496 கற்றதைச் சொல்ல இயலாதவர் மணமற்ற மலர் ஆவார்.
497 ஆக்கம் தருவது துணைநலம்;; வேண்டுவன தருவது வினைநலம்.
498 புகழும் நன்மையும் தராதனவற்றை என்றும் கைவிடுக.
499 நற்பெயர் வேண்டுமாயின் தீச்செயல் தவிர்க்க.
500 நல்லெண்ணம் கொண்டோர் அல்லல் வரினும் இழிவான செய்யார்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 481 – 490)



Vaazhviyal unmaikal aayiram 481-490 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 481-490

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/10/2011


481 துன்பத்தின் இலக்கு உடம்பு என உணர்ந்து கலங்காதிரு.
482 துன்பத்தை இயல்பு என்போன் துன்புற மாட்டான்.
483 துன்பமே இன்பம் எனக் கொண்டால் பகைவரும் மதிப்பர்.
484 நூலறிவுடன் உலகியல் அறிவும் தேவை.
485 தீயன எண்ணும் அமைச்சர் பல கோடிப் பகைவர்க்குச் சமம்.
486 திறனில்லாதவர் நன்கு திட்டமிட்டாலும் அரைகுறையாகவே முடிப்பர்.
487 ஆற்றலில் சிறந்தது பேச்சாற்றல்.
488 ஆக்கமும் கேடும் தருவது சொல்க.
489 கேட்டவர் மகிழவும் கேளாதவர் கேட்க விரும்பவும் அமைவதே சொல்வன்மை.
490 திறன் அறிந்து சொல்லுதலே அறமும் பொருளுமாகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 471 – 480)




Monday, October 24, 2011

vaazhviyal unmaikal aayiram 471-480 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 471-480

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/10/2011





471 முயற்சி செல்வத்தைத் தரும்; முயலாமை வறுமையைத் தரும்.
472 பொறியின்மை குறைபாடு அன்று; முயற்சி இன்மையே குறைபாடாகும்.
473 தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி முடித்துத் தரும்.
474 அயரா உழைப்பு விதியை ஓட்டும்.
475 இடையூறுகளைச் சிரிப்புடன் எதிர்கொள்க.
476 வெள்ளம் போன்ற துன்பமும் உள்ளத்தின் உறுதியால் நீங்கும்.
477 துன்பத்திற்குத் துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் தருவர்.
478 கடுமையான உழைப்பாளியிடம் இடுக்கண் இடர்ப்படும்.
479 மனம் கலங்காதவன் அடுக்கடுக்காய் வரும் துன்பத்திற்கே துன்பம் தருவான்.
480 செல்வம் பெற்ற பொழுது பேணாதவர் இல்லாத பொழுது அல்லல் படுவதேன்?
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 461 – 470)


Vaazhviyal unmaikal aayiram 461-470 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 461-470

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/10/2011



461 காலத்தாழ்ச்சி கெட்டுப் போகவிரும்புவோரின் ஊர்தி.
462 சோம்பல் குடிப்பெருமைக்குக் கேடு.
463 குடி உயர்த்த மடி அகற்று. (மடி-சோம்பல்)
464 யார் துணை இருப்பினும் சோம்பல் உடையார் பயனடையார்.
465 மடியுடையார் இகழ் அடைவார்.
466 சோம்பல் இல்லா ஆளுமை உலகையே ஆளும்.
467 முடியாது என்று தளரக் கூடாது.
468 முயற்சியால் பெருமை வரும்.
469 செயலை முடிக்காதவனை உலகம் ஏற்காது.
470 இன்பம் விரும்பாமல் செயலை விரும்புபவன் சுற்றத்தாரின் துன்பம் துடைக்கும் தூண்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 451 – 460)


Sunday, October 23, 2011

Vaazhviyal unmaikal aayiram 451-460: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 451-460


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/10/2011


451 கண்ணோட்டம் இல்லாதவர் நிலத்திற்குச் சுமை.
452 செயலில் ஊறு நேரா வண்ணம் கண்ணோட்டம் உடையவர்க்கு உரியது இவ்வுலகு.
453 தனித்தனி மூன்று ஒற்றர் மூலம் செய்தியை அறிக.
454 ஒற்றர்க்குச் சிறப்பு ஊரறியச் செய்யற்க.
455 பொருளுடைமை நீங்கும்; உள்ளமுடைமை நிலைக்கும்.
456 ஊக்கம் உடையவனிடம் வழிகேட்டு ஆக்கம் செல்லும்.
457 உள்ளத்தின் அளவே உயர்வின் அளவு.
458 மனவலிமையே செல்வம்.
459 முயற்சி உடையவனே உயர்ச்சி அடைவான்.
460 சோம்பல் துன்பமே தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 441 – 450)

Saturday, October 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 441-450 :வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 441-450

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/10/2011


441 முறை தவறும் ஆட்சியாளர் பொருளையும் மக்கள் ஆதரவையும் இழப்பர்.
442 அல்லல்படுவோரின் கண்ணீர் ஆட்சியாளரை அகற்றும் படை.
443 நல்லாட்சி இல்லையேல் புகழொளி இல்லை.
444 கொடுங்கோல் ஆட்சியில் உடைமையும் துன்பமே.
445 மீண்டும் குற்றம் செய்யா வண்ணம் நடுவுநிலையுடன் தண்டிப்பதே சிறந்தது.
446 வேகமாய் ஓங்கி மெதுவாய்த் தட்டுவது போல் தண்டி.
447 கொடுங்கோல் ஆட்சி விரைவில் அழியும்.
448 ஆளுவோரைக் கொடுமையாளராக மக்கள் எண்ணத் தொடங்கினால் உறுதியாய் ஆட்சி அகலும்.
449 மக்கள் பார்க்க இயலா ஆட்சியாளன் அழிவான.;
450 கண்ணோட்டம் உள்ளவர்களால் உலகம் உள்ளது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 431 – 440)


Friday, October 21, 2011

Vaazhviyal unmaikal aayiram 431-440: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 431-440

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/10/2011



431 குடி தழுவி ஆளுவோர் வழியில் உலகம் நிற்கும்.
432 நல்லாட்சியில், மழையும் விளைச்சலும் நன்றாய் அமையும்.
433 ஆளுவோருக்கு வெற்றி தருவது படையன்று; செங்கோன்மையே.
434 முறையான ஆட்சியே ஆளுவோரைக் காக்கும்.
435 எளிமையின்மையும் நீதி இன்மையும் ஆள்வோரை அழிக்கும்.
436 குடிகளைக் காக்க குறைகளைக் களைதல் அரசின் பணி.
437 மிகவும் கொடியவரைத் தண்டித்தல் களைபிடுங்குவது போன்றதே.
438 கொலையாளியிலும் கொடியோர் மக்களை அலைக்கலைக்கும் ஆட்சியாளா.;
439 ஆட்சி அதிகாரத்தால் பொருள் பெறுபவர் வழிப் பறியாளர் போன்றவரே.
440 நாள்தோறும் முறைசெய்யா ஆட்சியாளர் அழிவர்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 421 – 430)

Thursday, October 20, 2011

Vaazhviyal unmaikal aayiram 431-430: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 421-430


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/10/2011



421 கடுஞ்சினத்தையும் விடத் தீது மகிழ்ச்சியில் ஏற்படும் செயல் மறதி.
422 வறுமை அறிவைக் கெடுக்கும்; மறதி புகழைக் கெடுக்கும்.
423 மறதி உடையார்க்கு நன்மைகள் வரா.
424 இடர் வரும் முன்பே காக்க மறந்தால் துன்பமே வரும்.
425 மறவாமை மறவாமல் அமைந்தால் அதற்கு இணை எதுவுமில்லை.
426 மறவாமல் எண்ணி ஆற்றினால் முடியாதது எதுவுமில்லை.
427 புகழுக்குரியனவற்றைச் செய்யாவிட்டால் எப்பொழுதும் நன்மை வரா.
428 மகிழும் பொழுது இகழ்ச்சியில் கெட்டாரை நினைக்கவும்.
429 எண்ணியதையே எண்ணு; எண்ணியவாறு எய்துவாய்.
430 யாராயினும் நடுவுநிலைமையுடன் முறைசெய்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 411 – 420)

Wednesday, October 19, 2011

vaazhviyal unmaikal 411-420: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 411-420

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/10/2011


411 பணியை ஒப்படைத்த பின்பு அதற்கு உரியவனாக அவனை ஆக்குக.
412 வேலை செய்வோனை வேற்றாளாக எண்ணாதே.
413 பணிசெய்வோன் குறையையும் செயலையும் நாள்தோறும் ஆராய்க.
414 வறுமையிலும் சூழ இருப்பவரே சுற்றத்தார்.
415 அன்பு நீங்காச் சுற்றம் ஆக்கம் பலவும் தரும்.
416 சுற்றத்தோடு பழகாதவன் செல்வம், கரையில்லாக் குளத்து நீராகும்.
417 செல்வத்தின் பயன் சுற்றம் சூழ வாழ்தல்.
418 கொடையும் இனிய சொல்லும் சுற்றத்தைப் பெருக்கும்.
419 மறைக்காமல் உண்ணும் காக்கையைப் போன்றவர்க்கே ஆக்கம் உரியது.
420 அனைவரையும் பொதுவாய்ப் பார்க்காமல் அவரவர் சிறப்பறிந்து மதிக்கவும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 401 – 410)


Tuesday, October 18, 2011

Multi personality of Dr.S.Ilakkuvanar - Thirukkural Studies: பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

நன்றி “சென்னை வானொலி நிலையம்”
பதிவு செய்த நாள் : 18/10/2011


பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச்  செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.

ஆராய்ச்சிப்பாதைக்குக் கால்கோளிட்ட பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவத்திலேயே பேராசிரியர் திருக்குறள் பாக்களை எளிதில் பயன்படுத்தும் சொல்வன்மையைப் பெற்றார். திருக்குறளைப் பலர் அறியாக் காலத்திலேயே அதனை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பெற்ற ஊக்கம் திருக்குறளைப் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக்  கொள்ளுமாறு செய்தது. பரப்புரைக்கான சொற்பொழிவுச் சிந்தனைகளும் கட்டுரை வன்மைகளும் அவரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியைச் செம்மையுறச் செய்தன.

இதழ்கள் வழி ஆராய்ச்சி

இலக்கிய இதழ்களுக்கும் மலர்களுக்கும் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பிய பேராசிரியர் சி.இலக்குவனார், பல்வேறு இதழ்கள் நடத்தியும் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இலக்கியம், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, குறள்நெறி (திங்களிதழ்), குறள்நெறி (திங்கள் இருமுறை இதழ்), Kuralnery (Bi-monthly), குறள்நெறி (நாளிதழ்) ஆகிய இதழ்கள் வாயிலாகத் தமிழ் பரப்புப் பணியை மேற்கொண்ட பேராசிரியர்  குறள்நெறி பரப்பும் தளமாகவும் இவற்றை அமைத்துக் கொண்டார். இவற்றுள் திருக்குறள் உரைகள் பற்றியும் கால ஆராய்ச்சி பற்றியும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழகத்தின் மூலம் ‘குறள்நெறி’ எனத் தனிச் சுற்றுத்திங்களிதழும் நடத்தினார். இவ்விதழ் ‘தனி மனிதப்  படை’யாகத் திகழும் வண்ணம் திருக்குறள் விளக்கம்,  திருக்குறள்  விளக்கக் கதை பொதிபாடல், குறள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், குறள் உரைகளில் திருவள்ளுவருக்கு முரணாக இடம் பெற்றுள்ள மாறுபாடுகளும் அவற்றால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஊறுபாடுகளும் பற்றிய கட்டுரைகள் எனப் பலவற்றைத் தாமே படைத்தளித்துக் குறள்  விருந்து வழங்கினார். . . . பேராசிரியர் படைத்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுத் தமிழன்னையின் வாட்டத்தைப் போக்கின.[1] திருக்குறள் ஆராய்ச்சியில் இவருக்கெனத் தனியிடத்தை இவை பெற்றுத்தந்தன.

எக்காலத்திற்கும்  ஏற்ற உரை

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எக்காலத்திற்கும் ஏற்றவாறு திருக்குறள் நூலை அளித்துள்ளதுபோல் இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரான பேராசிரியர் சி.இலக்குவனாரும் எக்காலத்திற்கும்  ஏற்றவாறு உரை எழுதியுள்ளார்; முடியாட்சியில் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தரும் அறவுரைகள் குடியாட்சியிலும் பொருந்தும் வகையில் நன்கு விளக்கம் தருகிறார். சில நேர்வுகளில் திருவள்ளுவர் கால மன்னராட்சிச் சூழலில் அவர் கூறியுள்ளார் எனக் குறிப்பிடினும் இன்றைய மக்களாட்சிக்கு எவ்வாறு மிகச் சரியாகப் பொருந்துகின்றது என்ற முறையிலும் விளக்கம் தருகிறார். பேராசிரியர் திருவள்ளுவர் பார்வையில் இன்றைக்குப் பொருந்தும்முறையை விளக்கி இருப்பார். அல்லது தம் கருத்துகளைத் தம் கருத்துகளாகவே தெரிவித்து அவை திருக்குறள் கருத்துகளுக்கு ஏற்றனவாக அமையும் வகையை விளக்கி உள்ளார்.

உரைநயம் உணர்த்தும் உரை வளம்

இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார்.

பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமை

எல்லாரும் இந்நாட்டு அரசர், அமைச்சர் யார்?,  திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம்  அல்லது காதல் வாழ்க்கை, வள்ளுவர் வகுத்த அரசியல் என்னும் தலைப்பிலான திருக்குறள் விளக்க நூல்கள் பேராசிரியரின் ஆராய்ச்சிப்புலமையைத் தெள்ளிதின் வெளிப்படுத்துகின்றன. தள்ளற்பாலன சாற்றும் இயல், அறிவன தெரிவன அறையும் இயல், கொள்ளற்பாலன கூறும் இயல் என்ற முறையில் திருக்குறள் அதிகாரங்களைத் தொகுத்துத் தரும் முறையும் அதிகாரங்களுக்கான விளக்கங்களும் திருக்குறள் கருத்துகளுக்கு மாறுபடாத பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமையை நன்கு வெளிப்படுத்துகின்றன.

பேராசிரியரின் ஆராய்ச்சி அணுகுமுறைகளின்  சிறப்புகள்

இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. எளிமை
2. நுண்மை
3. பகுத்தறிவுப் பார்வை
4. தமிழ் நெறிப் பின்புலம்
5. பெண்ணுரிமை பேணல்
6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்
7. ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல்
8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை
9. தனியர் தாக்குதல் இன்மை
10.கருத்தில் வன்மை
11.நடையில் மென்மை
12.வகுத்தும் தொகுத்தும் விவரித்தல்
13.சொல்விளக்கமும் இலக்கணக் குறிப்பும்
14. அறிவியல்பார்வை
15. புரட்சி எண்ணம்



இவை அனைத்தையும் காண்பதற்குக் காலச் சூழல் இடந்தராமையால் – பானைச் சோற்றுக்குப் பதம்பார்ப்பது போல் – இவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

மகளும் மகனும் இணையே!

மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும் பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள் முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.[2]
பெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,
‘தந்தை  மகற்குஆற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67)
என்கிறார் உலகப் புலவர்  திருவள்ளுவர். பேராசிரியர் இலக்குவனார், பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
மகற்கு’ என்று கூறினாலும் ‘மகளும்’ அடங்குவர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச் செல்லினும் எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை கூடும் இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில் அமரும் தகுதியைக் குழந்தைகட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா வாயிலாகப் பெற்றோரின் கடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.[3]தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய தம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர் விளக்கியுள்ளது எந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே

பெண்மைக்கு எதிராக எங்கு களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண் இருபாலார்க்கும் உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய மாட்டாதவர்கள் என்னும் தவறான கருத்தேயாகும்  பெண்களும் ஆண்களைப் போன்று அறியும் ஆற்றல் உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.’’[4]

ஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும்
கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’[5] எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார். பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘‘‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமாலை. ‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்[6].

விளையுளுக்கு விளக்கம்:
எவையெல்லாம் சேர்ந்திருப்பன நாடு எனத் திருவள்ளுவர் வரையறுத்து,
‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’    (திருக்குறள் 731) என்கிறார்.
இத்திருக்குறளுக்குத் திருக்குறள் நெறி அறிஞர் இலக்குவனார் தரும் விளக்கம் ஒன்றே அவரின் உரைவளத்தையும் பொதுமை போற்றும் குறள்நெறி உணர்வையும் உணரப் போதுமானது எனலாம். இக் குறளுக்கு விளக்கம் தருகையில், ‘‘குறையாத விளைவிக்கப்படும் பொருள்களும் விளைவுக்குக் காரணமாம் அறிஞரும் குறைவு இலாத செல்வமுடையவரும் சேர்ந்திருப்பது நாடு ஆகும்’’[7] என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். பிறர் விளக்கங்களின்றும் பேராசிரியர் சிறப்பாகவும் ஏற்கும்படியுமானதுமான விளக்கத்தைத் தருகிறார். அன்றும் இன்றும் அனைவரும் ‘விளையுள்’ என்றால், வேளாண்மை விளைவு, அல்லது வேளாண் பொருள் விளைவிப்போர், அல்லது விளையும் நிலம் என்ற பொருளில்தான் விளக்கம் அளிக்கின்றனர். வாழ்விற்கு உணவுதான் அடிப்படை. என்றாலும் அதுமட்டும் போதுமா? எனவே, பேராசிரியர், திருவள்ளுவர் கருத்தை உணர்ந்து உரிய பொருளைப்  பின்வருமாறு விளக்குகிறார்.
‘‘விளையுள் என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும்’’ [8] என்கிறார். இவ்வாறு, ‘ஒரு நாடு உணவில் மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. வாழ்விற்கு வேண்டிய அனைத்தையும் ஆக்கும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் பெற்றுத் திகழ வேண்டும்’ என எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்ற உரை விளக்கம் அளித்துள்ளார்.

தக்கார் பற்றிய தகைசால் கருத்து:

பேராசிரியர் சி.இலக்குவனார், தக்கார்  என்பார் நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்கிறார். ‘கற்றறிஞர், புதியன கண்டு பிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverer, Inventor) இவரையே பொறுத்துள்ளது நாட்டின் விளையுள் பெருகுதல் [9]என விளக்குகிறார். பழந்தமிழ்ப் புலமையும் மேனாட்டு அறிவியல் புதுமையறிவும் கைவரப் பெற்ற பேராசிரியர், தக்கார் என்றால் நல்லோர், அறிவோர் என்று விளக்காமல், அறிவியல் வளர்ச்சிக்கு முதன்மை கொடுக்கும் வகையில் தக்கார் என்பதற்கு நாட்டின் நலனைப்பெருக்கத்தக்க கற்றறிஞரையும் அறிவியல் அறிஞரையும் குறிப்பிடுவது ஏற்கவும் போற்றவும் கூடிய கருத்தன்றோ !

‘செல்வம்’ உணர்த்தும் உரைச் செல்வம்:
‘தாழ்விலாச் செல்வர்’  என்பது குறைவிலாச் செல்வமுடையவர் என்னும் பொருளைத் தரும் என்னும் பேராசிரியர் செல்வம் என்பது பொருள் சேர்க்கையன்று என இதற்குத் தரும் விளக்கம் எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்றதன்றோ !  அவரது விளக்கம் வருமாறு: ‘‘செல்வர் சேர்வது நாடு என்பதனால் வறியரும்  அங்கிருப்பர் என்று பொருள் படலாம். செல்வர்  என்று சிலரைப் பிரிப்பின் எஞ்சியோர் செல்வரல்லாதவர் என்றுதானே கருதுதல் வேண்டும் என்று நினைத்து எப்பொழுதும் செல்வர்களும் வறிஞர்களும் நிலைத்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுவது பொருத்தமுடைத்தன்று என்று புகல்வோருமுளர். செல்வர் என்றால் தமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் முதலிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பாரேயன்றி, அளவு கடந்த பொருளைத் திரட்டி யார்க்கும் பயன்படாது முடக்கி வைத்து மகிழ்வோரல்லர். ‘நுகரப் பெறுவன யாவும் உடையோரே செல்வர் ஆவார்;  நுகரப் பெறுவன இல்லாதார் வறிஞர் ஆவார்’ என்பதே தமிழ்நூலார் கருத்தாகும். ஆதலின் அங்குத் தாழ்விலாச் செல்வர் சேர்வது என்பது எல்லா மக்களும் யாவும் பெற்றிருப்போராய் இருத்தல் வேண்டும் என்பதற்கேயாம் என்று அறிதல் வேண்டும்.’’[10] இவ்வாறு செல்வம் என்பதற்குத் தமிழ்நெறிக்கேற்ற விளக்கத்தைப் பேராசிரியர் அளித்துள்ளார்.

அருங்கேடும் கேடறியாமையும்

நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி இயற்கையோடு இயைந்து யாவரும்  ஏற்கத்தக்க வகையில் பேராசிரியர்  விளக்குகிறார்.

உரிமையுள்ள நாடே பாதுகாப்பா நாடு
நாட்டிற்கு அணிகலன்களில் ஒன்றாகப் பாதுகாப்பைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள்738) குறிப்பிடுகிறார். இதற்கு, அனைத்து உரையாசிரியர்களிடமிருந்தும் வேறுபட்டு, எண்ணும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, வழிபடும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்எனச் சிறப்பாக ஆராய்ந்து உரைக்கிறார்.

செங்கோல்ஆட்சி இலக்கணம்
செங்கோல்ஆட்சி இலக்கணத்தை உலகப் புலவர் திருவள்ளுவர்,

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.’ (திருக்குறள் 543) என விளக்குகிறார்.
பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ்ப் பண்பாட்டு அறநூலாம் திருக்குறளுக்கு ஏற்றவாறு பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
“அந்தணர் நூற்கும் – உயிர்களிடம் இரக்கம் கொண்டு தொண்டாற்றும் பெரியோர் வெளியிடும் நூல்களுக்கும், அறத்திற்கும் – நல்நெறிக்கும், ஆதியாய் – அடிப்படையாய், மன்னவன்கோல் – மன்னன் ஆட்சி, நின்றது – நிலைபெற்றது.
நாட்டுமக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் அறநூல்கள் வேண்டும். அவ் வறநூல்களை வெளியிடுவோர் அறவோர் ஆவார். அறவோராம் பெரியோர்கள் நல்நெறி நூல்களை வெளியிட ஆட்சி வேண்டும். அறவோர் நூல்களை வெளியிடாதவாறு தடுத்தலும் கூடுமன்றே. சில நாடுகளில், உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள் தம் கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதலின், நல்நெறி நூல்கள் வெளிவர நல்லாட்சி இன்றியமையாதது. அந் நூல்களில் கூறப்படும் அறம் நிலைபெறவும் நல்லாட்சி வேண்டும்.”[12] இவ்வாறு படைப்புரிமைக்குத் தடையாக நில்லாமல் காப்பாக விளங்கும் செங்கோலாட்சியைப் பேராசிரியர் விளக்குகிறார்.

செங்கோலாட்சி
செங்கோலாட்சியில் நாடுஇருக்கும் நிலையை,
‘இயல்புளி கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.’ (திருக்குறள் 545)
என உலகப் புலவர் திருவள்ளுவர் படம்பிடித்துத் தருகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், மன்னவனின் நல்லாட்சி முறையால் இவை அமையும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்:
“நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.”[13] அனைவரும் ஏற்கத்தக்க வகையில் சிறப்பாக விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் திறன் போற்றற்குரியது.
‘கல்வி’ க்கான விளக்கம்
‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பது தான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லோரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று மொழி வாயிலாகக் கற்றலன்று. அந்தந்த நாட்டுமொழியே கல்வி கற்பிக்கும் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருத்தல் வேண்டும்.

ஊழலுக்கு எதிரான கல்வி
ஒழுக்கத்திற்கு ஊன்றுகோலாகவும் ஊழலுக்கு எதிரானதாகவும் கல்விப்பயிற்சி அமைதல் வேண்டும் எனத் திருக்குறள்அறிஞர் இலக்குவனார் பின்வரும் வகையில் விளக்குகிறார்: இடுக்கட்படினும் இளிவந்த செய்யாத உளப்பாங்கை இளமை யிலிருந்தே கொள்ளுமாறு கல்விப் பயிற்சியளித்தல் வேண்டும். மனத்துக்கண் மாசிலாத வாழ்வுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகுவதற்குத் துணிவு பெறல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகாமையால்தான் இன்று பல ஒழுக்கக்கேடுகள் நிலை பெற்றுள்ளன. ஆதலின் கற்றவாறு ஒழுகுதலையே கல்விப் பயிற்சியாகக் கொள்ளும் கல்வித் திட்டம் வகுத்தல் வேண்டும். இளமையிலிருந்தே திருக்குறளைப் பயிலுமாறு செய்து அதன் நெறியில் ஒழுகும் பயிற்சியை அளித்தல் வேண்டும்.
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை[14]
என்பதனை உறுதிமொழிக் கொண்டு வாழ்தல் வேண்டும். இவ்வாறு வினைத் தூய்மை பெற்று வாழ்ந்தால்அன்றிக் கையூட்டு ஒழிப்புக் குழுக்கள் கணக்கின்றித் தோன்றியும் பயனின்று. [15]

திருவள்ளுவர் சமயம் கடந்தவர்
தெய்வப்புலவர் திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தவராகக் கூறுகையில் அவரைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகப் பேராசிரியர் விளக்குகிறார்.

அனைவருக்கும் கல்வி உரிமை
கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண்உடையர் கல்லா தவர்     (திருக்குறள் 393) என்னும் குறளை விளக்கும் பொழுது, ‘‘பிறநாட்டு அறிஞர்கள், கல்வியை உணவுக்கும் காற்றுக்கும், ஞாயிற்றின் ஒளிக்கும் ஒப்பிட்டுள்ளனர். காற்றும், உணவும், ஞாயிற்றின் ஒளியும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது கல்வியும் என்று கருதினர். ஆனால் வள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டுள்ளமை மிகமிகப் போற்றுதற்கு உரியது. காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்கட்கு ஒருவகையும் அல்லாதவர்கட்குப் பிறிதொரு வகையும் பெறலாம். ஆண்கள் ஒருவகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ. செல்வர்க்கு ஒருவிதமான கண்ணும் ஏழைகட்கு இன்னொரு விதமான கண்ணும் இல்லையே.’’[16] என்னும் பேராசிரியர்,  உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைப் பெறும் உரிமை உண்டு என்பதைப் படிப்பவர் உள்ளத்தில் பதிக்கின்றார்.

எழுத்தைக் காக்க வள்ளுவர் ஆணை
எண்என்ப; ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.              (திருக்குறள் 392)
இக்குறள் மூலம் எண்ணையும் எழுத்துவடிவத்தையும் காக்க வேண்டித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை பேராசிரியர் விளக்குகிறார்.[17]

பொருளியலிலும் நாட்டியல்
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்                                (திருக்குறள் 463)
இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச்  சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார்.


பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி
பேராசிரியர் அவர்கள் பிற அறிஞர்கள் கருத்திற்கிணங்கத் தற்பொழுது நடைமுறையில் உள்ள திருவள்ளுவர்ஆண்டைப் (கி.மு.31) பின்பற்றினாலும்  திருவள்ளுவர் காலம் தமிழ்ச் சங்கக்காலப் பகுதியில் வடக்கே அசோகர் வாழ்ந்த காலம் என்கிறார்.
திருவள்ளுவர் காலம் சங்கக் காலம்
‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,
“நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென
அறம்பாடிற்றே ஆயிழை கணவ[19]
என்று பாடுகின்றார். இதில்,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு[20] என்ற குறளை எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார். ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும்’’ எனப் பேராசிரியர் ஆய்ந்து திருவள்ளுவரைச் சங்கக்காலப் புலவர் என்கிறார்.

திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்
‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார். ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர்ஆதல் வேண்டும். புத்தர் பெருமானுக்குப் பிற்பட்டுத் தோன்றி புத்தமதம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பொழுது வந்தார் என்று கொள்ளலாம். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் உலகம் எங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழ் நாட்டிலும் பரவிற்று. ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’ என மேலும் ஆராய்ந்து திருவள்ளுவரின் காலம்  அசோகர்  காலம் என ஆராய்ந்து நிறுவுகிறார்.

பேராசிரியரின் முடிபுகள்
பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப்புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.

  1. திருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர்
  2. பெண்களுக்கான முதல் புரட்சியாளர்
  3. எண்ணப்புரட்சி செய்தவர் திருவள்ளுவர்
  4. தமிழ்ப்பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர்
  5. திருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார்
  6. திருக்குறள் உலகத்திற்கான நூல்
  7. வள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே!
  8. திருவள்ளுவர் காலம் சங்கக்காலம்
  9. திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்
10.  திருக்குறள் தனித்தமிழ் நூல்
11.  திருக்குறள் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது
12.  குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்




நிறைவுரை :
திருக்குறளைத் திருக்குறள் வழியிலேயே ஆராய்ந்து தமிழ்நெறியின்படியானஆராய்ச்சிச் சிறப்பினை அறிய இதுவரை சிலவற்றைப் பார்த்தோம். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், “இந்நாளில் திருக்குறளுக்குப் புதுப் புது  உரைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பொருந்தியன சிலவே. அச்சிலவற்றுள் ஒன்று தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் உரை’’ என்று பராட்டியுள்ளமை பேராசிரியரின் உரை வளத்தின் சிறப்பாகும். ‘‘பொதுவாகப் புராணக் கதைகளைக் கேட்கத்தான் மக்கள் கூட்டமாக வருவர்; ஆனால் குறள்நெறி வகுப்புகளுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகிறார்கள்’’ எனத் தந்தை பெரியார் அவர்கள், பேராசிரியரின் திருக்குறள் விளக்கக் கூட்டங்கள் குறித்துத் தெரிவித்தமை பேராசிரியரின் திருக்குறள் ஆராய்ச்சி மக்களால் பெரிதும் கவரப்பட்டதற்குச் சான்றாகும். இவ்வாறு அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் ஆராய்ச்சித்திறனால் பேராசிரியர் சி.இலக்குவனார்  அவர்களின் திருக்குறள் படைப்புகள்  எளிமையாய் அமைந்து எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துமணிகளாக அமைந்துள்ளன. இவற்றிற்கிணங்கத் திருக்குறளைப் புரிந்து அதன் வழி நின்று திருவள்ளுவர் பெருமையைக் காலமெல்லாம் நிலைக்கச் செய்வோம்!
-      இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com

[1] (இக்கட்டுரையாளரின்)குறள்நெறி  அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்
[2] வள்ளுவர் கண்ட இல்லறம்,பதிப்புரை
[3] வள்ளுவர் கண்ட இல்லறம்
[4] வள்ளுவர் கண்ட இல்லறம்
[5] வள்ளுவர் கண்ட இல்லறம்
[6] வள்ளுவர் கண்ட இல்லறம்
[7] வள்ளுவர் வகுத்த அரசியல்
[8] வள்ளுவர் வகுத்த அரசியல்
[9] வள்ளுவர் வகுத்த அரசியல்
[10] வள்ளுவர் வகுத்த அரசியல்
[11] வள்ளுவர் வகுத்த அரசியல்
[12] வள்ளுவர் வகுத்த அரசியல்
[13] வள்ளுவர் வகுத்த அரசியல்
[14] திருக்குறள் 656
[15] வினைத்தூய்மை (ஆசிரியருரை):குறள்நெறி மலர் 1 : இதழ் 10; வைகாசி 19, 1995 (1.6.1964)
[16] வள்ளுவர் வகுத்த அரசியல்
[17] வள்ளுவர் வகுத்த அரசியல்
[18] வள்ளுவர் வகுத்த அரசியல்
[19] ஆலந்தூர்கிழார். புறநானூறு 34
[20] திருக்குறள் 110



Followers

Blog Archive