Tuesday, July 30, 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1- 5: இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி



திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1- 5: இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
இணைப்புகளைக் காண்க.
 1

2

 2



3

4

5

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, July 28, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220

(குறள்நெறி) 

  1. பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே!
  2. துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே.
  3. தீச் செயல்  புரிந்து அழிவைத் தேடாதே!
  4. தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே!
  5. உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே,
  6. கேடு இல்லாதிருக்கத்  தீயன செய்யாதே!
  7. மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக!
  8. முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து!
  9. எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக!
  10. உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, July 23, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210

(குறள்நெறி) 

  1. சீர்மையும் சிறப்பும் நீங்கப் பயனற்ற சொல்!
  2. பயனில பேசிப் பதடி ஆகாதே! 
  3. நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிரு!
  4. பயனில்லாச் சொல்லைச் சொல்லாதே!
  5. மறந்தும் பயனற்ற சொல்லாதே!
  6. பயனுடையன சொல்லுக!
  7. தீய செய்யத்  தீயோனாயின் அஞ்சாதே! நல்லோனாயின் அஞ்சுக!
  8. தீயினும் தீதான தீயன செய்யாதே!
  9. தீயன செய்தார்க்கும் தீயன செய்யாதே!
  10. பிறர்க்குக்  கேடு  செய்யாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, July 14, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200

(குறள்நெறி) 

  1. பிறர் குறையை நீ கூறி,  உன் குறையை உலகம் கூறச் செய்யாதே!
  2. இனியகூறி வளரும் நட்பை உணராது குறைகூறிப் பிரிக்காதே!
  3. நெருங்கியோர் குற்றத்தையும் கூறுபவரிடமிருந்து விலகு!
  4. அறம் செய்யாவிடினும் புறங்கூறாதே!
  5. அறனல்ல செய்தாலும் புறங்கூறாதே!
  6. புறங்கூறி வாழாதே!  
  7. பிறர் குற்றம்போல் உன் குற்றம் காண்!
  8. எல்லாராலும் இகழப்படப் பயனில சொல்!
  9. தீய செய்தலினும்  தீதான  பயனில சொல்லாதே!
  10. நீதிக்கு மாறாகப் பயனற்றவை சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைப் போற்ற வாருங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழைப் போற்ற வாருங்கள்!


அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
பாடம் படிப்போம் வாருங்கள்!
பாரில் உயர்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
கலைகள் பயில்வோம் வாருங்கள்!
களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
ஒன்றாய் ஆட வாருங்கள்!
நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
நாளும் அறிவோம் வாருங்கள்!
நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
தமிழைப் படிப்போம் வாருங்கள்!
தரணியில் நிமிர்வோம் வாருங்கள்!

இலக்குவனார் திருவள்ளுவன்
( ‘twikle twinkle little star’ மெட்டில்)
முல்லைச்சரம், சூலை 2019, பக்கம் 42

Monday, July 8, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190

(குறள்நெறி)

  1. பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே!
  2. உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே!
  3. பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!  
  4. அருள்வழி நின்றாலும் பிறர்  பொருள் விரும்பாதே!
  5. பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே!
  6. செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே!
  7. (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்!
  8. அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே!
  9. முன்னால் இழித்துச் சொன்னாலும் பின்னால் பழித்துச்சொல்லாதே!
  10. அறம்கூறும் நெஞ்சத்தான் எனில் புறஞ் சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 191-200]

Followers

Blog Archive