Showing posts with label தமிழ்ச்சிமிழ். Show all posts
Showing posts with label தமிழ்ச்சிமிழ். Show all posts

Monday, June 30, 2014

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்



thamizh06
83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி
- பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67

84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்)
- பெரியபுராணம்: பாயிரம் 3    
85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்,
கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 2. திரு நாட்டுச் சிறப்பு:1

86. நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
      – பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 2. திரு நாட்டுச் சிறப்பு: 35
87. இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 4 திருக்கூட்டச் சிறப்பு : 11
     periyapuraanam+cover01
88. ‘மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் பெற்றனை;
நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக’ என்றார் தூமறை பாடும் வாயார்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 70
89. சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு’ என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம் : 76
90. அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அரு மறையோய்! உன் அடி என்
சென்னியில் வைத்தனை’ என்னத் ‘திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்புக் காண்’ என்று அருள, அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்
– பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்5. தடுத்தாட்கொண்ட புராணம்: 86
91. பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப் போய்ப் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 91

92. இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெருக் கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பிப்
பெருக்கு ஓதம் சூழ் புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்
திருக் கோலக்கா இறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள் பாடி.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 114
93. தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேர் அன்பு மிக, அடி பணிந்து தமிழ் பாடி
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 115  

  1. நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம் : 125
  95. அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி, முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி,
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி, நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி நின்றே, இன்னிசை வண்தமிழ் மாலை பாட.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 126    

96. மை வளர் கண்டர் அருளினாலே வண்தமிழ் நாவலர் தம் பெருமான்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 130  

97. பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்,
புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 167  
98. தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்
பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 182

99. தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்,
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 202
100. உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த நம்பி
ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவு அணைந்தார்;
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 203 
ilakkuvanar_thiruvalluvan+5

Monday, May 20, 2013

இலக்கியங்களில் இடம் பெறும் தமிழ் - தமிழ்ச்சிமிழ்

இலக்கியங்களில் இடம் பெறும் தமிழ்


பக்க ஆக்கியில் சிரீலிபி எழுத்துருவில் கணியச்சிடப்பட்ட பக்கங்கள் எடுப்பு ஆவண அமை ப்பில் மாற்றும் பொழுது எழுத்துப்பிழைகள் (எ.கா. : இலக்குவனார் திருவள்ளுவன் என்னும் பெயரே தவறாக மாறிஉள்ளது.) வடிவமைப்புக் குலைவுகள் (எ.கா. :  தலைப்பில் குறிக்கப்பெறும் பாக்களுக்கான கட்டம்  கீழிறங்கி வந்துள்ளது), மூலத் தமிழ் எண்கள் இப்போதைய வழக்கு எண்கள் வடிவம் பெறுதல் அல்லது ஒரு பகுதி மட்டும் இடம் பெறுதல்  ‌ என்பன போன்ற சில தவறுகள் நேர்ந்துள்ளன. எனினும் இடத்திற்கேற்ப உரியவாறு  அறிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன். தமிழ் என்னும் சொல்லாட்சி மிகவும் பிற்பட்ட கா லத்தில் வந்ததாகச் சிலர் தவறாக எழுதும் போக்கும் அதைப் பலர் மேற்கோளாகக் கையாளும் போக்கும் பெருகி வருவதால், 10 ஆண்டுகளுக்கு முன்  தொகுக்கப்பெற்ற தமிழ் பற்றிய விவரங்களை இங்கே  பகிர்ந்துள்ளேன். இவற்றிலும் கூடுதலாகவே தமிழ்  என்னும்  சொல் இடம் பெற்றுள்ள விவரங்களை நூல்களைப்படிக்கும் பொழுது அறிகின்றேன். தமிழோசை நாளிதழின் களஞ்சியம் பக்கத்தில தமிழ்ச்சிமிழ்த் தொகுப்பில் இருந்து சில பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாட்டு மலரில் தமிழ் பற்றிய அடைமொழிகள் வேறு சிலவும் சேர்க்கப்பெற்று இடம் பெற்றுள்ளன. மற்றொரு இதழில் இவ்வாறு இத்தளத்தில் இடம்  பெறுவதைவிட மேலும் கூடுதலான குறிப்புகள் இடம் பெறும் வகையில்  விவரங்கள் அளித்துள்ளேன். இவ்விவரங்கள் யாவும்  முற்றானவை அல்ல என்பதற்காக இவற்றைக் குறிப்பிடுகின்றேன்.  காலங்கள் தோறும் உள்ள இலக்கியங்களில் இருந்து அனைத்து விவரங்களையும் தொகுக்கும் பணியில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. நேரம் வாய்க்கும் பொழுது முழுமையான விவரங்களைத்  தொகுப்பேன். எனினும் இன்றைய நிலையில் இதுபோன்ற தொகுப்பு வேறில்லை.  ஆதலின் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் அறிந்து பரப்புங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/































Followers

Blog Archive