Saturday, August 27, 2011

பிழைகளைத் தவிர்ப்போம்

பிழைகளின்றிப் பேசுவதும் எழுதுவதுமே கடமை என எண்ணுவோர்க்கும் மாணாக்கர்க்கும் தவறில்லாமல் எழுதுவது குறித்த காணொளி காண்க  : 

 

பிழைகளைத் தவிர்ப்போம்

இலக்குவனார் திருவள்ளுவன்


vaazhviyal unmaikal aayiram 221-230: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 221-230

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 26, 2011


221 அருளின்றி அல்லவை செய்தால் பொருள் நீங்கும்.
222
இவ்வுலகிற்குப் பொருளும் புகழ் உலகிற்கு அருளும் தேவை.
223
அருளற்றவர்க்கு ஆக்கம் எப்பொழுதும் இல்லை.
224
மெலியாரைத் துன்புறுத்தும் பொழுது வலியார் முன் தன்னை நினைத்துப்  பார்க்கவும்.
225
பேணாவிட்டால் பொருள் வளம் பெருகாது.
226
ஊன் உண்போர்க்கு அருளாட்சி இல்லை.
227
உடல்சுவை கண்டால் நல்லாக்கம் வராது.
228
புலால் என்பது பிற உடலின் புண்ணே! அதை உண்பானேன்?
229
ஆயிரம் வேள்வியினும் ஒன்றன் உயிர் பிரிக்காமையே நன்று.
230
ஊனை மறுத்தவனை உயிர்கள் தொழும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  211 – 220

Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 210-220 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 210-220

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011


211 புகழ்ப்பணி புரிந்தவரையே போற்றும் உலகு.
212
புகழோ இகழோ காரணம் நாமே.
213
புகழ் வரும் வகையில் செயல்புரிக.
214
புகழ் பெறா வாழ்க்கை வசையுடைய வாழ்க்கை.
215
புகழில்லாமல் வாழ்ந்தால் நிலப்பயனும் குன்றும்.
216
புகழ் நீங்கி வாழ்பவரும் வாழாதவரே.
217
பொருட்செல்வம் கீழோரிடமும் இருக்கும்; அருட்செல்வமே செல்வம்.
218
அருளாட்சியே அனைத்து வழிக்கும் துணை.
219
அருளுடையார் துன்பம் அடையார்.
220
அருள் ஆள்வோர் அல்லல் அடையார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 201 – 210


vaazhviyal unmaikal aayiram 201-210 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 201-210

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 23, 2011


201 கேட்போர் மகிழும் வகையில் கொடுக்க வேண்டும்.
202
பசி தாங்கும் துறவியைவிடப் பசியைப் போக்குவோரே வலிமையானவர்.
203
இல்லாதவர் பசி தீர்த்தலே பொருளைச் சேமிக்கும் இடம்.
204
பகுத்துண்பவரைப் பசிப்பிணி அண்டாது.
205
கொடையால் வரும் இன்பத்தை உணராதவரே பொருளைச் சேர்த்து இழப்பர்.
206
இரத்தலைவிட இழிவானது தனித்து உண்பதே.
207
கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே.
208
கொடுத்துப் புகழ் பெறுவதைவிட உயிர்க்கு ஆக்கம் வேறு இ¢ல்¢லை.
209
கொடையாளர் புகழையே அனைவரும் பேசுவர்.
210
உலகில் அழியாதது புகழே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்   -   191-200

 

vaazhviyal unmaikal aayiram 191-200 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 191-200

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011


191 ஒப்புரவைவிட உயர்வு எவ்வுலகிலும் இல்லை.
192
பேரறிவாளர் செல்வம் ஊருணி போல் உதவும்.
193
நல்லோர் செல்வம் பயன்மரம் போல் பயன்தரும்.
194
பெருந்தகையாளர் செல்வம் மருந்துமரம் போன்று உதவும்.
195
ஒப்புரவாளர் வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்கார்.
196
நல்லவர் வறுமை என்பது நல்லன செய்ய இயலாமையே.
197
ஒப்புரவினால் கேடு வந்தால், அது தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளும்   சிறப்பு உடையது.
198
வறியவர்க்குக் கொடுப்பதே கொடை.
199
நல்லவழியில் வந்தாலும் பெறாதே; மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத்   தவறாதே.
200      இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது உயர்ந்தோர் பண்பு.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


Thursday, August 25, 2011

vaazhviyal unmaikal aayiram 181-190: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 181-190

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 20, 2011


181 தீயன தீயினும் தீது.
182
தீயன செய்தார்க்கும் தீயன செய்யாமையே தலைசிறந்த அறிவு.
183
பிறர்க்குச் செய்யும் கேடு நம்மைச் சூழும்.
184
துன்பம் வேண்டாவிடில் பிறருக்குத் தீயன செய்யாதே.
185
தீச்செயலால் வரும் பகை அழிவைத் தரும்.
186
தீயவை செய்தாரை நிழல்போல் கெடுதி தொடரும்.
187
உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே.
188
தீயன செய்யாதவன் கேடு இல்லாதவன்.
189
மழைபோல் கைம்மாறு கருதாதே.
190
முயற்சியால் வரும் பொருள் பிறர் உயர்ச்சிக்கே.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


vaazhviyal unmaikal aayiram 171-180 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 171-180

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 19, 2011


171 பிறர் குற்றம் போல் தம் குற்றம் காண்பதே சிறப்பு.
172
பயனில சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்.
173
தீய செய்தலினும் தீது பயனில சொல்லல்.
174
பயனற்ற சொன்னால் சீர்மையும் சிறப்பும் நீங்கும்.
175
பயனில பேசுவான் பதடியே ஆவான்.
176
நயமற்ற சொல்லைவிடப் பயனற்றவற்றைச் சொல்லாதிருத்தல் நன்று.
177
அறிவுடையார் சொல்லார், பயனில்லாச் சொல்லை.
178
தூய மனத்தர் மறந்தும் பயனற்ற சொல்லார்.
179
பயனுடையன சொல்லுகங் பயனற்றன சொல்லற்க.
180
தீவினை செய்ய தீயோர் அஞ்சார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 161-170

Followers

Blog Archive