Friday, August 26, 2011

vaazhviyal unmaikal aayiram 191-200 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 191-200

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 22, 2011


191 ஒப்புரவைவிட உயர்வு எவ்வுலகிலும் இல்லை.
192
பேரறிவாளர் செல்வம் ஊருணி போல் உதவும்.
193
நல்லோர் செல்வம் பயன்மரம் போல் பயன்தரும்.
194
பெருந்தகையாளர் செல்வம் மருந்துமரம் போன்று உதவும்.
195
ஒப்புரவாளர் வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்கார்.
196
நல்லவர் வறுமை என்பது நல்லன செய்ய இயலாமையே.
197
ஒப்புரவினால் கேடு வந்தால், அது தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ளும்   சிறப்பு உடையது.
198
வறியவர்க்குக் கொடுப்பதே கொடை.
199
நல்லவழியில் வந்தாலும் பெறாதே; மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத்   தவறாதே.
200      இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது உயர்ந்தோர் பண்பு.

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்


No comments:

Post a Comment

Followers

Blog Archive