Friday, December 19, 2014

கலைச்சொல் தெளிவோம்! 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்!

கலைச்சொல் தெளிவோம்! 

7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்!

 – இலக்குவனார் திருவள்ளுவன்

senor citizen
kalaicho,_thelivoam01
  மூதாளர்
- இலக்குவனார் திருவள்ளுவன்

மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர்.
இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு :
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14)
நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10)
பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54)
முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24)
இவற்றின் அடிப்படையில், மூத்த அகவை மக்களைக் குறிப்பிட நாம் மூதாளர் எனச் சொல்லலாம். மூதாட்டி என்னும் சொல் இப்பொழுது வழக்கில் உள்ளது.
மூதாளர் – senor citizen


- இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 57

No comments:

Post a Comment

Followers

Blog Archive