வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20

(குறள்நெறி)

  1. உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி!
  2. உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்!
  3. மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்!
  4. மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!.
  5. கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்!
  6. மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி!
  7. கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்!
  8. வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை என்பதை அறி!
  9. வானம் வழங்காவிடில் தானமும் தவமும் இல்லை என உணர்!
  10. நீரின்றி உலகமும் வான் மழையின்றேல் ஒழுக்கமும் இல்லை என உணர்!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்