Tuesday, October 4, 2011

vaazhviyal unmaikal aayiram 391-400: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 391-400


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/10/2011



391 சூழலை ஆராய்ந்து அறியாமல் எதையும் தொடங்காதே.
392 வலிமையாளர்க்கும் பாதுகாப்பான இடமே ஆக்கம் தரும்.
393 மெலியோரும் வலியோரே இடமறிந்து செய்தால்.
394 இடம் அறிந்து செய்தால் எதிர்ப்பும் இல்லாமல் போகும்.
395 முதலைக்கு நீரில் வலிமை; அவரவர் இடமே அவரவர்க்கு வலிமை.
396 தேர் கடலில் செல்லா; கப்பல் நிலத்தில் ஓடா. ஆளுமை என்பது
அவரவர்சூழலே.
397 இடமறிந்து செய்தால் அஞ்சாமையே துணையாகும்.
398 சேற்றில் சிக்கிய யானையை நரியே கொல்லும்; பொருந்தா இடமும்
பெருந்தீங்காகும்.
399 நன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும்.
400 குணமும் குற்றமும் ஆய்ந்து மிகுதியைக் கொள்க.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 381-390)

No comments:

Post a Comment

Followers

Blog Archive