Thursday, October 27, 2011

Vaazhviyal unmaikal aayiram 481-490 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 481-490

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 26/10/2011


481 துன்பத்தின் இலக்கு உடம்பு என உணர்ந்து கலங்காதிரு.
482 துன்பத்தை இயல்பு என்போன் துன்புற மாட்டான்.
483 துன்பமே இன்பம் எனக் கொண்டால் பகைவரும் மதிப்பர்.
484 நூலறிவுடன் உலகியல் அறிவும் தேவை.
485 தீயன எண்ணும் அமைச்சர் பல கோடிப் பகைவர்க்குச் சமம்.
486 திறனில்லாதவர் நன்கு திட்டமிட்டாலும் அரைகுறையாகவே முடிப்பர்.
487 ஆற்றலில் சிறந்தது பேச்சாற்றல்.
488 ஆக்கமும் கேடும் தருவது சொல்க.
489 கேட்டவர் மகிழவும் கேளாதவர் கேட்க விரும்பவும் அமைவதே சொல்வன்மை.
490 திறன் அறிந்து சொல்லுதலே அறமும் பொருளுமாகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 471 – 480)




No comments:

Post a Comment

Followers

Blog Archive