Thursday, October 27, 2011

Vaazhviyal unmaikal aayiram 491- 500 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 491-500

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/10/2011



491 வெல்லும் சொல் பிறிதின்றிச் சிறந்ததைச் சொல்க.
492 விரும்புமாறு கூறுக; கேட்பவற்றுள் பயனுள்ளவற்றை அறிக.
493 சொல்வன்மை, சோர்வின்மை, அஞ்சாமை உடையவரை வெல்லுவார் யாருமில்லை.
494 இனிதாய் முறைப்படக் கூறுவோனிடம் உலகம் அடைக்கலம்.
495 சுருக்கமாய்ச் சொல்லத் தொpயாதவர் விரிவாய்ப் பேச விரும்புவர்.
496 கற்றதைச் சொல்ல இயலாதவர் மணமற்ற மலர் ஆவார்.
497 ஆக்கம் தருவது துணைநலம்;; வேண்டுவன தருவது வினைநலம்.
498 புகழும் நன்மையும் தராதனவற்றை என்றும் கைவிடுக.
499 நற்பெயர் வேண்டுமாயின் தீச்செயல் தவிர்க்க.
500 நல்லெண்ணம் கொண்டோர் அல்லல் வரினும் இழிவான செய்யார்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 481 – 490)



No comments:

Post a Comment

Followers

Blog Archive