Friday, October 28, 2011

vaazhviyal unmaikal aayiram 501-510 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 501-510

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/10/2011



501 தவறென உணர்ந்தால் மீண்டும் செய்யாதே.
502 தாயின் பசியைப் போக்குவதற்குக் கூடப்; பழிப்பன செய்யாதே.
503 பழிச்செயல் தரும் செல்வத்தைவிடச் சான்றோர் வறுமையே சிறந்தது.
504 கடிந்தன செய்தால் முடிந்தாலும் துன்பம் தரும்.
505 பிறர் அழக் கொண்ட பொருள் நாம்; அழப் போகும்.
506 அறவழி வந்தன இழந்தாலும் மீண்டும் கிடைக்கும்.
507 குறுக்கு வழியில் வரும் பொருள் பச்சை மண்பாத்திரத்தில் வைக்கும் நீர்.
508 மன உறுதியே வினை உறுதி.
509 தீயன செய்யாமையும் துன்பம் வந்;தால் தளராமையுமே சிறந்த வழி.
510 வினை முடிக்கும் முன் விளம்பரம் தேடினால் துன்பமே வரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 491 – 500)


No comments:

Post a Comment

Followers

Blog Archive