Monday, October 24, 2011

Vaazhviyal unmaikal aayiram 461-470 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 461-470

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/10/2011



461 காலத்தாழ்ச்சி கெட்டுப் போகவிரும்புவோரின் ஊர்தி.
462 சோம்பல் குடிப்பெருமைக்குக் கேடு.
463 குடி உயர்த்த மடி அகற்று. (மடி-சோம்பல்)
464 யார் துணை இருப்பினும் சோம்பல் உடையார் பயனடையார்.
465 மடியுடையார் இகழ் அடைவார்.
466 சோம்பல் இல்லா ஆளுமை உலகையே ஆளும்.
467 முடியாது என்று தளரக் கூடாது.
468 முயற்சியால் பெருமை வரும்.
469 செயலை முடிக்காதவனை உலகம் ஏற்காது.
470 இன்பம் விரும்பாமல் செயலை விரும்புபவன் சுற்றத்தாரின் துன்பம் துடைக்கும் தூண்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 451 – 460)


No comments:

Post a Comment

Followers

Blog Archive