Monday, October 24, 2011

vaazhviyal unmaikal aayiram 471-480 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 471-480

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/10/2011





471 முயற்சி செல்வத்தைத் தரும்; முயலாமை வறுமையைத் தரும்.
472 பொறியின்மை குறைபாடு அன்று; முயற்சி இன்மையே குறைபாடாகும்.
473 தெய்வத்தால் ஆகாததையும் முயற்சி முடித்துத் தரும்.
474 அயரா உழைப்பு விதியை ஓட்டும்.
475 இடையூறுகளைச் சிரிப்புடன் எதிர்கொள்க.
476 வெள்ளம் போன்ற துன்பமும் உள்ளத்தின் உறுதியால் நீங்கும்.
477 துன்பத்திற்குத் துன்பப்படாதவர் துன்பத்திற்கே துன்பம் தருவர்.
478 கடுமையான உழைப்பாளியிடம் இடுக்கண் இடர்ப்படும்.
479 மனம் கலங்காதவன் அடுக்கடுக்காய் வரும் துன்பத்திற்கே துன்பம் தருவான்.
480 செல்வம் பெற்ற பொழுது பேணாதவர் இல்லாத பொழுது அல்லல் படுவதேன்?
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 461 – 470)


No comments:

Post a Comment

Followers

Blog Archive