Wednesday, November 2, 2011

Vaazhviyal unmaikal aayiram 531-540 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 531-540

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 02/11/2011



531    அறிந்தவரிடம் அறிந்தவராய் நடந்து கொள்க.
532    அறியாதவரிடம் அறியாதவராய் நடந்து கொள்க.
533    உணரும் அறிவுடையோர் முன் பேசுக.
534    நல்லவையில் பேசுவோர் புல்லவையில் பேசற்க.
535    கற்றவர் முன் தெளிவாகப் பேசுநரே கற்றவர் ஆவார்.
536    போர்க்களத்திற்கு அஞ்சாதவரும் அவைக்களத்திற்கு அஞ்சுவர்.
537    கற்றதைக் கூறிக் கல்லாததை அறிக.
538    அஞ்சுவோருக்கு வாளால் என்ன பயன்? அவை அஞ்சுவோருக்குக் கற்ற நூலால் என்ன பயன்?
539    சொல்லும் திறனற்றோர் படித்துப் பயனில்லை.
540    நல்லார் அவை அஞ்சுபவர் கல்லாதவரிலும் கடையராவார்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 521-530)
 
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive