Friday, November 4, 2011

Vaazhviyal unmaikal aayiram 551-560: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 551 - 560

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 04/11/2011



551    பொருள் ஆகிய விளக்கு எண்ணிய நாட்டில் பகை இருள் போக்கும்.
552    தீமையல்லாத வழியில் வந்த பொருளே அறத்தையும் இன்பத்தையும் தரும்.
553    அருளோடும் அன்போடும் வராத பொருள் ஈட்டத்தை நீக்குக.
554    அன்பின் மகளாகிய அருள், பொருள் என்னும் செவிலித் தாயாலேயே வளருவாள்.
555    செல்வம் சேர்க்க.
556    நல்வழியில் பெற்ற பொருள் அறமும் இன்பமும் தரும்.
557    பகைவனுக்கு விலைபோகாத் தொன்று தொட்டச் சிறப்பு உடையதுவே படை.
558    எமனே  வந்தாலும் எதிர்ப்பதே படை.
559    முயல் வேட்டையின் வெற்றியைவிட யானை வேட்டையின் தோல்வியே சிறந்தது.
560     பகைவர்க்குக் குறைபாடு வந்த பொழுது உதவுவதே சிறந்த பேராண்மை.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 541-550)
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive