Monday, November 21, 2011

vaazhviyal unmaikal aayiram 698-707: iniyavai naarpathu: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 698-707 : இனியவை நாற்பது


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


51. வருவாய் அளவறிந்து பிறருக்குக் கொடுப்பீர்,
52. ஒருவர் பக்கம் சாயாத நடுவுநிலைமை கொள்க,
53. பெரும் பயன் கிடைத்தாலும் விரும்பியவாறெல்லாம் செய்யாமல் தம் இயல்பில்மாறுபடாமல் வாழ்க,
54. சோலை வளர்த்தலும் குளம் தோண்டலும் செய்க,
55. அறவோர்க்குக் கொடுப்பீர்,
56. சூதாடிகளுடன் சேராதே,
57. வெற்றி அடைய வேண்டி சினம் அடையாதே,
58. தன்னால் முடியக் கூடிய வரையில் செயல் புரிக,
59. தம்மிடம் இல்லாத பொருளுக்கு ஏங்கித் துன்புறாமல் கிடைத்தது கொண்டு முடிந்ததைச் செய்க,
60. ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்குக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – இனியவை நாற்பது 41-50)
0


No comments:

Post a Comment

Followers

Blog Archive