Thursday, August 11, 2011

vaazhviyal unmaigal aayiram 101-110: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 101-110

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13343 பதிவு செய்த நாள் : August 11, 2011
.

101 இன்சொல் எக்காலமும் இன்பம் தரும்.
102
இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் எதற்கு?
103
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஈடாகா.
104
உற்றநேரத்து உதவி சிறிதாயினும் உலகத்தினும் பெரிதே.
105
பயன்கருதாமல் செய்யும் உதவி பாற்கடலினும் பெரிது.
106
திணையளவு செயலும் பயன்தெரிவார்க்குப் பனையளவாகும்.
107
உதவியின் அளவு உதவப்பட்டோரின் உயர் எண்ணத்தைப் பொறுத்ததே.
108
தூயவர் உறவை மறக்காதே.
109
துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே.
110
கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக.

No comments:

Post a Comment

Followers

Blog Archive