Thursday, September 8, 2011

Vaazhviyal unmaikal aayiram 231-240: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231-240

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 8, 2011
231 துன்பம் பொறுத்தலும் செய்யாமையுமே தவமாகும்.
232
ஆக்கமும் அழிவும் தவத்தால் வரும்.
233
சுட்டால் சுடரும் பொன்போல் துன்பம் பட்டால் ஒளிர்வர்.
234
தன்னலம் அற்றவரை மன்னுயிர் தொழும்.
235
உலகம் பழித்ததை ஒழித்தால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலும் வேண்டா.
236
கூடா ஒழுக்கம் கேடாய் முடியும்.
237
பிறரால் எள்ளப்பட வேண்டாதவன் கள்ளத்தனத்தில் இருந்து தன் நெஞ்சைக்  காக்கவும்.
238
திருட எண்ணுவதும் தீது.
239
திருட்டுச் செல்வம், பெருகுவது போல் தோன்றினாலும் அழியும்,
240
திருட்டு ஆசை தீராத் துன்பம் தரும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 221 -230

No comments:

Post a Comment

Followers

Blog Archive