Friday, September 16, 2011

Vaazhviyal unmaikal aayiram 271-280: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் : 271-280

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 16, 2011



271 பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதுவதே அறிவின் பயன்.
272 உனக்குத் தீயன எனக் கருதுபவற்றைப் பிறருக்குச் செய்யாதே.
273 எவர்க்கும் எப்பொழுதும் எவ்வழியிலும் தீங்கு செய்யாதே.
274 பிறருக்குச் செய்யும் தீமை உனக்கே திரும்பும்.
275 துன்பம் செய்தவர் துன்பமே அடைவார்.
276 துன்பம் வேண்டாம் எனில் துன்பம் செய்யாதே.
277 கொல்லாமையே உயர் அறமாம்.
278 பகுத்துண்டு வாழ்தலே தலைசிறந்த பண்பாம்.
279 பொய்யாமையினும் நன்று கொல்லாமையே.
280 கொல்லா வழியே நல்ல வழியாகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 261-270)



No comments:

Post a Comment

Followers

Blog Archive