Monday, September 19, 2011

Vaazhviyal unmaikal aayiram 291-300: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 291/300

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 19, 2011


291. ‘நான்’, ‘எனது’ என்னும் செருக்கினை ஒழிப்போர் உயர்ந்தோர் உலகம் புகுவர்.
292. பற்றினைப் பற்றாதவரைத் துன்பங்கள் பற்றா.
293. பற்றினை விடப் பற்றற்றவரைப் பற்றுக.
294. சொல்லப்படுவது எத்தன்மையாயினும் அதன் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
295. வேண்டாமையே சிறந்த செல்வம்.
296. ஆசைக்கு அஞ்சுவதே அறமாகும்.
297. ஆசை இல்லையேல் துன்பமும் இல்லை.
298. வேண்டுவன கிட்டா; வேண்டாதவை போகா; இதுவே ஊழாகும்.
299. நன்மையே ஏற்போர் தீயவற்றையும் தாங்குக.
300.ஆள்வோர் எளிமையாயும் இனிமையாயும் இருக்க வேண்டும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 281-290)

No comments:

Post a Comment

Followers

Blog Archive