Wednesday, September 28, 2011

Vaazhviyal unmaikal aayiram 351-360: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 351-360


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 27/09/2011




351 நல்லவர் தொடர்பைக் கைவிடுவது பலரின் பகையினும் பன்மடங்குத்   தீமையாகும்.
352 சிற்றினம் கண்டு அஞ்சுவதே பெருமை.
353 சிற்றினத்தைச் சுற்றமாக்குவது சிறுமை.
354 சேர்க்கையைப் பொறுத்தே அறிவு அமையும்.
355 மனத்தால் அமையும் உணர்ச்சி; இனத்தால் அமையும் தன்மை.
356 மனத் தூய்மையும் செயல் தூய்மையும் இனத் தூய்மையால் அமையும்.
357 இனத் தூய்மையால் ஆகாத நல்லது எதுவுமில்லை.
358 மனநலம் ஆக்கம் தரும்; இனநலம் புகழ் தரும்.
359 மனநலம் இருப்பினும் இனநலமே பாதுகாப்பு.
360 நல்லினமே நல்ல துணைங் தீயினமே மிகுந்த துன்பம்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive