வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
(குறள்நெறி)

71. மக்கள் அறிவுடைமை நம்மினும் மாநிலத்தவர்க்கு இனிது என உணர்!
72. மகனையும் மகளையும் பிறர் புகழுறுமாறு வளர்!
73. “பெற்றோர் செய்த தவம் யாதோ” எனச் சொல்லுமாறு வாழ்!
74. அன்பினை அடைக்கும் தாழ் இல்லை என அறி!
75. “எல்லாம் எனக்கே” என்று சொல்லாது பிறர்க்குத் தா!
76. பெற்றோர் அன்பால் பிறந்ததை எண்ணி அன்பு கொண்டு வாழ்!
77. அன்பினால் பழகும் விருப்பத்தையும் சிறந்த நட்பையும் பெறு!
78.அன்பின் பயனால் சிறப்பு பெறு!
79. அன்பை அறத்திற்கும் மறத்திற்கும் துணையாய்க் கொள்!
80. அன்பு இல்லாது அறத்தால் துன்புறாதே!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்