(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-1 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

எப்போதுமே தனித் தமிழ் என்று சொன்னாலே, பிராமண எதிர்ப்பாகவும், இறை மறுப்பாகவும் கருதி எதிர்க்கருத்துகளைக் கூறுவோர் உளர். தன்மானம், தன்மதிப்பு முதலியவை பற்றிப் பேசும் திராவிட இயக்கத்தார் தமிழுக்கும் குரல் கொடுப்பதால் அவ்வாறு தவறான கருதுகையும் பரப்புரையும் நேர்ந்துள்ளன. உண்மையில் காலங்காலமாக இறை ஏற்பாளர்களும் தமிழுக்குக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். இறைநெறி இலக்கியக் காலங்களிலும் திருமுறைப் புலவர்களும் பிறரும் தமிழை உயர்த்தியே கூறி வந்துள்ளனர்.

இறைவழிபாட்டில் சமற்கிருதம் புகுந்து பரவத் தொடங்கியதால் அதற்கு எதிர்ப்பாக,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)

 எனத் திருமூலர், என்னை நன்றாக இறைவன் படைத்தது, தன்னை நன்றாகத் தமிழில் போற்றவே என்கிறார்.

இறைவன் கட்டளைக்கிணங்கத் தமிழில் பாடிய சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் செந்தமிழ்ப்பாட்டுக்குப் பேரானந்தப் பேரருள் அளித்தருளும் பேராற்றல் உண்டு என்பதைத் தேனமுதத் திருப்பாட்டு என்னும் தொடர் மூலம் வள்ளலார் விளக்குகிறார்.,

தேன்படிக்கும் அமுதாம் உன்

திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போ(துஎன்னை

நான்மறந்தேன் நாவொன்றோ ? ஊன்படிக்கும் உளம்படிக்கும்

உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண்

தனிக்கருணைப் பெருந்தகையே.’

என்கிறார் அவர்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் கட்டளைக்கிணங்கப் பாடினார் என்பர். அவர், இறைவனே அவரைத் தமிழில் பாடுமாறு சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார்

நான்மறை தமிழ்மறையே

இங்கே தூமறை என்பதன் நோக்ம் என்ன? தமிழில் தமிழ் மரபு போற்றும் மறைகளும் வேதங்களும் இருந்தன. பின்னர் வந்த ஆரியர் இதே பெயர்களிலேயே நூல்களை இயற்றினர். அவை நல்லன அல்ல. எனவே, தமிழின் உயர்வைக் குறிப்பிடத்  தூ மறை (தூய மறை) என்கிறார்.

நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே!” எனத்தமிழ்க்கடல் மறைமலையடிகள்தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் முதலிய அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.

தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளனஅதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளனசங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனதமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர்தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ் மறைகளையும் தமிழ் வேதங்களையும் குறிப்பிடும் இடங்களை ஆரியமாக எண்ணித் தவறு செய்துவிட்டனர்.

புரையில்

நற்பனுவல் நால் வேதம்

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர்.

குற்றமற்ற அறவழிப்பட்ட வேதம் எனக் கூறுவது ஏன்ஆரிய வேதம் அறிமுகமான காலக்கட்டம் அதுதமிழ் வேதங்கள் அறநெறிகளை மட்டுமே உணர்த்துவனஆரிய வேதங்கள் அவ்வாறல்லசான்றாக அதர்வண வேதம் நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று கருதுவதைக் குறிக்கலாம்.  “அதர்வம்வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின் என நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம்பொருளதிகாரம்புறத்திணை யியல்நூற்பா 20, உரைகூறியுள்ளமை இதனை உறுதி செய்கிறதுஆரிய வேதங்கள் குற்றமுடையனஅவ்வாறு தமிழ் மறைகளை எண்ணக்கூடாது என்பதற்காகத்தான் ‘புரைதீர் நற்பனுவல் என்கிறார் புலவர். (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!, தினச்செய்தி, 05.09.2019)

     “ மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்

என்பதுதான் அப்பாடல்.

இங்கே நாம் சமற்கிருதம் குறித்த தவறான செய்திகள் குறித்தும் பார்ப்போம். சமற்கிருதம செம்மொழியல்ல, நல்லொழுக்கங்களைப் போதிக்கும் இலக்கியங்களை உடையது அல்ல, எனச் சமற்கிருத நூலாசிரியர்களே தெரிவித்துள்ளனர். நம்மில் பலர், அறியாமையின் காரணமாக, “சமற்கிருதம் 2000 ஆண்டுகளாக நம்மை ஆட்சிசெலுத்தி வருகிறது. சமற்கிருதம் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது. சமற்கிருதப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இருந்தன” என்றெல்லாம் தவறாகக் கூறி வருகின்றனர்.

பேச்சுமொழியாக இல்லாத சமற்கிருதம் எங்ஙனம் ஆட்சிமொழியாக இருந்திருக்க முடியும். அறிஞர்கள் பலர் கூறியுள்ளதுபோல், தமிழ்நாட்டில் ஒரு போதும் சமற்கிருதம் ஆட்சிமொழியாக இருந்ததல்லை. பிராமணர்களுக்குச் சடங்குகளுக்காகச் சமற்கிருதம் கற்பிக்கப்பட்டதே தவிர, மக்களுக்கான சமற்கிருதப் பள்ளிகளும் இருந்ததில்லை.

2000 ஆண்டுகளாகச்சமற்கித வழிபாடு இருந்ததாகக் கூறி வருவதும் தவறே.  இடைக்காலத்தில்தான் இரிக்கு ஓதும் மறையவர்க்கு ஓர் இளங்கோயில் என ஒரே ஒரு கோயிலில் சமற்கிருத வழிபாடு பிராமணர்களுக்காக நடைமுறையில் கொண்டுவரப்பட்டது.

திருமணத்தில் ஆரிய முறையும் பிற்பட்ட காலத்தல்தான் வந்துள்ளது.”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என இளங்கோ அடிகள் கூறுவது சமற்கிருதத் திருமண முறையல்ல. ஆரிய வழிபாடுமுறைகளுக்கான எதிர்ப்பைத் தேவந்தியிடம் கண்ணகி வாயிலாகக்காட்டுகிறார் இளங்கோ அடிகள். இது வேள்வி முறைத் திருமணமும் அல்ல.

ஆரியரின் வேள்வி என்பது நெய் முதலிய உணவுப்பொருள்கள் மட்டுமல்ல, மான் முதலிய உயிரினங்களையும் போடும் உயிர்க்கொலை செயல். விலங்கினங்கள், பறவையினங்கள் மட்டுமல்ல, மனிதர்களையும் குறிப்பாகக் பெண்களையும் வேள்வித்தீயில் இடும் கொடுஞ்செயலே வேள்வி.  ஆரியர்களால் போற்றப்பட்ட அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, பாஞ்சாலி ஆகிய பெண்களும் வேள்வித் தீயில் போடப்பட்டு உயிர்ப்பலி யாக்கப்பட்டவர்கள்.(புகழ் பெற்ற இதிகாசப் பெண்மணிகள் ஐவர், பாரதி புத்தகாலயா வெளியீடு).  உயிர்க்கொலைக்கு எதிரான கோவலன் குலத்தினர் இத்தகைய வேள்வித்தீயை வளர்த்திருப்பார்களா? தீ என்பது அழிக்கபுவம் ஆக்கவும் வல்லது. தீயைப்போல் நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள்,தீய பண்புகள் ஆகியவற்றை அழிக்கவும் நல்லெண்ணங்கள், நற்பண்புகள் ஆகியவற்றை வளர்த்து ஆக்கவும் தீயை ஒரு குறியீடாகக் கொண்டு வலம் வந்திருப்பர். இதில் குறிப்பிட்டுள்ள மாமுது பார்ப்பான் பிராமணர் அல்லர். தமிழரே. இப்பொழுதும் சில வகுப்பாரிடையே தங்கள் வகுப்பில் உள்ள மூத்தவரைக் கொண்டு திருமணம் செய்விப்பது வழக்கமாக உள்ளது.அதுபோன்ற வழக்கம்தான்.